Sunday, June 13, 2010

வேண்டாம் இந்த சுயநலம்.........

வெட்டி முறிக்க வேற வேலை இருந்ததால கொஞ்ச நாலா ப்ளாக் எழுத வரல. சும்மா அங்க, இங்க படிகிரதோட இருந்தாச்சு.

ஆனா பாருங்க, நேத்து படிச்ச ஒரு மேட்டர் ர பாத்து ஏதோ எழுதனும்னு தோனுச்சு.

ஒரு நண்பரோட ப்ளாக் படிச்சேன்.

அவர் வெளிநாட்டுல நல்ல வசதியா வேலை செய்யுறார். அவரோட பொது நலம் கருதி ஊரு, பேரு வேண்டாமே!!

சில மாதங்கள் முந்தி சென்னை வந்ததாகவும், திரும்பி போரதக்கு ஒரு நாள் முந்தி கலைஞர் காப்பீடு திட்டத்துக்கு குடும்பத்தோட போயி போட்டோ எடுத்துகிட்ட தாகவும் போட்டு இருந்தார்.

எனக்கு படிச்சு அதிர்ச்சி ஆயிடிச்சு.!!!!!!!

அந்த திட்டம் என்பது வசதியில்லாத ஏழை எளிய மக்களுக்காக ஆரம்பிக்கபட்டது. மற்ற கேவலமான இலவச திட்டங்கள விட (எ. கா. இலவச டி.வி,) உன்னதமானது. வெளி நாட்டில் இருந்து கொண்டு ஆண்டுக்கு லட்ச கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டு இவர் இப்படி செய்தது என்னால ஏத்துக்க முடியல. (அண்ணன் நல்ல படிப்பு படிச்சு இருக்காரு, கை நிறைய சம்பளம் வாங்குறத அவரே ஒத்துக்கிட்டார்.)

பொறுக்க முடியாம அவரோட ப்ளாக்ல கீழ்கண்ட இந்த பின்னூட்டம் போட்டேன்:

Being a NRI, hopefully with a handful salary, how are you eligible for this insurance scheme?? I hope there is a maximum cap in the annual income for eligibility. Kindly explain gentleman! Waiting for your reply
13 ஜூன், 2010 12:09 am


அதுக்கு அவரோட பதில நீங்களே படிங்க:

ஆமாம்க தம்பி யுவராஜ்,
நான் nri தான், கைநிறைய சம்பாதிக்கீறேன் தான்,ஆனால் அது நிரந்தரமில்லை தம்பி,அதுவும் தவிர எனக்கு போட்டோ ஐடிக்கு அது தேவைப்பா தம்பி,நான் என்ன என்ன என் நாட்டுக்கு செஞ்சிருக்கேன்னு கணக்கு உனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை,மேலும் ரிசெஷனில் nriக்கள் ஏகம் பேர் எப்போது வேலை போய் திரும்பி வருவோம் என்றே இருக்கின்றனர். அவங்க வந்தா இது ஒரு பெரிய வரப்பிரசாதம்.மேலும் அரசுக்கு நான் 5வருடம் வரி செலுத்தியிருக்கிறேன். இனி அங்கே வந்து வேலைபார்த்தால் செலுத்தப்போகிறேன்.

உன் nri வெறுப்பை என்னிடம் உமிழாதே, btw ஆறு மாதம் ஆகியும் எங்கும் காப்பீட்டு அட்டை வழங்கப்படவில்லை,அது ஒரு #### துடைப்பு.
13 ஜூன், 2010 12:24 pm

மேற்கண்ட பொறுப்பற்ற (பருப்பான!) பதிலை கண்டதும் என்னோட சமூக கோபம் இன்னும் அதிகம் ஆனது. அவருக்கு மீண்டும் சில கேள்விகள் (அவரோட பதிலை வைத்தே) கேட்டேன். அண்ணன் செம கடுப்பாகி அதை வெளியிடவில்லை.

இப்போது வேற வழி இன்றி அந்த கேள்விகளை பதிவர்களின் சபையில் வைத்து விவாதிக்க வேண்டி உள்ளது. என்னோட சில நியாயமான கேள்விகளுக்கு யாரவது பதில் சொல்லுங்களேன்....ப்ளீஸ்!!!

a . போட்டோ ஐ.டி. க்கு பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வோட்டு போடுற கார்டு எல்லாம் இருக்கே!!!! அப்புறம் எதுக்கு இது?
b . நீங்க சாம்பாரிக்கறது நிரந்தரம் இல்லை என்பதற்காக அடுத்தவன்னுக்கு (ஏழைக்கு) உரிமை உள்ள ஒன்றை தட்டி பறிப்பீர்களா?
c . எல்லா NRI களுமே பணக்காரர்கள் இல்லை. மாதம் வெறும் 600 ரியால் மட்டும் சம்பளம் வாங்கும் பரம ஏழைகள் அநேகம். அவர்களுக்கு இந்த திட்டம் நிச்சயம் உதவும். உங்களை போல recession ல வேலை இழந்து வரும் மேதைகளுக்கு இது ஒரு வரபிரசாதமா? (எந்த கோவில் பிரசாதம் அண்ணா???)
d . அரசுக்கு வரி செலுத்தி இருந்தால், அரசின் எல்லா திட்டங்களுக்கும் உரிமை கோருவீர்களா? இலவச காப்பீட்டு திட்டம் வரி செலுத்துபவருக்கா இல்லை, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அடித்தட்டு மக்களுக்கா?

லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்:

a . Flight டிக்கெட் காசு குடுத்து எடுத்து வரீங்களா? இல்ல 'வெற்றி கோடி கட்டு' பார்த்திபன் மாதிரி withoutல வரீங்களா?
b . இலவச T .V (வண்ண தொலைகாட்சி சார்) குடுத்தாங்க. அப்படியே அதுவும் வாங்கியாச்சா?? நல்லா தெரியுதா?

எனக்கு உங்க NRI status மேல ஒரு காண்டும் இல்லைங்கண்ணா.... (வெறுத்து உமிழ ஒன்றும் இல்லை என்று புரிந்து கொள்க)

என்னா, நானும் உங்கள போல கை நிறைய சம்பாதிக்கும் ஒரு NRI தானுங்க.



அன்புடன்.......யுவராஜ்.

பதிவர்களே, என் உள்ள குமுறல்களை கொட்டி விட்டேன். நீங்களே இவர் செய்தது நியாயமா என்று ஒரு தீர்ப்பு சொல்லுங்க.

ஒருவேளை நான் ஈறை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்குறேன் என்று கருதினால் மன்னிக்க.

இந்த பதிவின் நோக்கமெல்லாம்:

எதையும் துஷ்ப்ரயோகம் செயாதீர்கள்.
அடுத்தவன் உரிமையை தட்டி பறிக்காதீர்கள்.

எனக்கு யாரையும் நடுத்தெருவில் நிறுத்தி, குற்றம் சுமத்தி அசிங்கபடுத்த விருப்பமில்லை. எனவே, அவர் பெயர் மற்றும் ஊரை நான் வெளிஇடவில்லை.

30 comments:

ரோகிணிசிவா said...

sir , i dont think he wil be utilizing that card for his treatment cause .,
any one holding the card doesnot mean that he is enjoying the benefits ,holding the card means he is eligible only , and it does not mean that he is enjoying its benefits ,like having voters card and not voting being an nri and also i dont think just for this sake he flew to India to get the card.
* this is my perspective only,it may or may not be true

பிரேமா மகள் said...

உங்க கேள்வி நியாயமானதுதான்.... பதில் சொல்ல வேண்டியது, அவரின் கடமை..

YUVARAJ S said...

கருத்துக்கு நன்றி!!
@ ரோஹினி
@ பிரேமா மகள்

ரோஹினி, கலைஞர் காப்பீட்டு திட்டம் என்பது ஒரு அடையாள அட்டை அல்ல. ஏழை மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள் ஒரு லட்சம் ருபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு பெரும் ஒரு திட்டம். இதன் பயனாளிக்கு வருட வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். நான் சொல்ல வருவது புரிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் யுவராஜ்

இவ்விவாதம் தேவையற்ற ஒன்று என நினைக்கிறேன். இத்திட்டத்தில் அவர் சேர்வதற்கு எவ்வித கெட்ட எண்ணமோ - நோக்கமோ -நிச்சயமாக இருக்காது. அவர் சேர்வதற்கு பல காரணங்கள் - கட்டாயங்கள் - இருந்திருக்கலாம். அதை வெளியில் சொல்ல இயலாது. இதனால் அவர் பெரிய பயன் ஒன்றும் பெற திட்டம் இருக்காது. இருப்பினும் அது அவரது தனிப்பட்ட விருப்பம். அதனை பொதுவில் நாறடிப்பது தேவையற்ற ஒன்று.

இக்கருத்தினைப் பதிய வேண்டாம் என நினைத்தேன். என் மறுமொழியினை வேண்டிக் கேட்டதால் - என் விருப்பத்திற்கு எதிராக - இங்கு பதிகிறேன்.

முதல் முதலில் இடும் மறுமொழி இவ்வாறு இருப்பதற்கு வருந்துகிறேன்.

நல்வாழ்த்துகள் யுவராஜ்
நட்புடன் சீனா

ஜோதிஜி said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...
This comment has been removed by the author.
Unknown said...

பொதுவாகவே நம்மவர்கள் மட்டும்தான் இலவச சேவைகளை குறைவாக பயன்படுத்துகின்றனர், நான் பெரும்பாலும் வெளிநாடுகளில் சுற்றியவன் என்பதால் அங்கு இதைவிட மிக மோசமாக இருக்கும். அங்கு இலவசம் என்றால் பெரிய பணக் காரர்களும் வரிசை கட்டி நிற்ப்பார்கள்.

இலவசம் என்பதே அதனை வாங்க அல்லது கிடைக்க வழியற்று இருக்கும் ஏழைகளுக்கானது. இங்கு இந்தியாவில் இலவசங்கள் பயன்படுத்திக் கொள்வது விவரமான நபர்களும், அரசியல் அள்ளக் கைகளுமே, காப்பிட்டு திட்டம் ஒரு வரப் பிரசாதம். ஆனால் நிறைய பணக் காரர்களும் அதனை பயன்படுத்துவதால் உடனே அறுவை சிகிச்சை மேற்க் கொள்ள வேண்டிய ஏழைகள் சாக வேண்டியிருக்கிறது.

கடனாக கிடைத்தால் இரண்டு யானைகள் வாங்கும் மக்கள் உள்ள ஊரில் இவரைப் போன்ற நபர்களுடன் வாழ்ந்துதான் ஆக வேண்டும்

Paleo God said...

அவர் வறுமையில்தான் இருக்கிறார் என்று அட்டையை வழங்கிய அரசாங்கமும் அதன் அளவுகோலுமே இங்கு பிரச்சனை. மற்றபடிக்கு அவரவரின் மனசாட்சியே அவரவரின் ஏழ்மையை முடிவு செய்கிறது. :))

YUVARAJ S said...

நன்றி

@ சீனா
@ஜோதிஜி
@கே.ஆர்.பி.செந்தில்
@ஷங்கர்

சீனாஜி: அவர் சுயநலமாக இருந்து இருக்கிறார். அதுவும் கெட்ட எண்ணமே. தனக்கு eligibility இல்லாத ஒரு திட்டத்தில் சேர்ந்து, இன்னொருவரின் உரிமையை தட்டி பரிதிரிக்கிறார். இதன் விளைவு, ஒரு உயிராக கூட இருக்கலாம். மேலும், இதில் சேருவதற்கு நிச்சயமாக சில பொய்யான தகவல்களை (வருமானம் சம்பந்தமாக) குடுத்து இருக்க வேண்டும். இதுவும் தவறான செயலே.....

ஜோதிஜி: இதுபோல பல பேரை ‘என்கவுண்டர்” செய்ய வேண்டி இருப்பதால் இந்த பெயர்....ஹி..ஹி..ஹி..ஹி...

Vijayashankar said...

என்னது தமிழ்நாட்டுலே வேலைகிடைக்குதா ? அப்போ சீக்கிரம் பெங்களூரிலிருந்து பொட்டி கட்டனும்.

அஷீதா said...

கலைஞர் காப்பீட்டு திட்டம் என்பது ஏழை எளிய சாமானிய மக்கள், உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெறுவதற்காக அமைக்க பட்ட திட்டம். இந்த திட்டத்தில் பல நுண்ணரசியல்கள் உள்ளன என்பது வேறு விஷயம். அதை பற்றி இங்கு விவாதிக்க விருப்பம் இல்லை.

குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 72,000க்கும் குறைவாக உள்ள அனைத்துக் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயன் பெறலாம் என்று சொல்லி இருக்கிறார்களே தவிர , மற்றவர்களை பயன் பெற வேண்டாம் என்று எங்கும் சொல்லவில்லையே. அப்படியே இருந்தாலும் , அவர் தன் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்து வந்தார் என்று சொன்னால், ஏன் அரசாங்கம் அவரிடம் அவருடைய வருமனைதை பற்றி கேட்டகவில்லை, எப்படி இவர் அந்த திட்டத்தின் பயனாளியாக இருக்கலாம் என்ற கேள்வி அவர்களுக்கு ஏன் தோன்றவில்லை. இது யாருடைய தவறு?

மனசாட்சி மனிதாபிமானம் என்று வெத்து கதைகள் எல்லாம் பேசி பிரயோஜனம் இல்லை. ஆண்டுக்கு ரூபாய் 72,000க்கும் அதிக வருமானம் இருப்பவர்கள் இந்த திட்டத்தின் பயனை அனுபவிக்க தடை செய்ய வேண்டும். நீங்க சொல்லி இருக்கும் நண்பர் இந்த திட்டத்தை தானும் தன் குடும்ப நலனுக்காகவும் செய்து இருக்கலாம் அதை தவறு என்று சொல்லிவிட முடியாது என்பது தான் என் தனிப்பட்ட கருத்து.

யுக கோபிகா said...

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .....

-யுக கோபிகா

YUVARAJ S said...

நன்றி!
@ விஜயஷங்கர்
@அஷிதா
@யுக கோபிகா

அஷிதா: உங்கள் நீண்ட கருத்துக்கு நன்றி. இதில் அரசாங்கத்தின் தவுறும் இருக்கு என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

"மனசாட்சி, மனிதாபிமானம் எல்லாம் வெத்து கதைகள் இல்லைங்க".
நம்ம வாத்தியாரோ டீச்சர்ரோ பள்ளி / கல்லூரில் வாங்கின சம்பளத்துக்கு மனசாட்சியோட பாடம் எடுத்ததால் தான் இன்னைக்கு நாமெல்லாம் நல்ல நிலைமையில் இருக்கோம்.

எல்லோரும் பயன் பெற இது ஒரு பொது திட்டம் இல்லை. அதனால் தான் வருமான வரம்பு என்ற அளவீட்டை வைத்து இருக்கிறார்கள். . When it is clearly told that the annual income should not exceed INR 72000, it is implied that those who are earning more than 72000 are not eligible.

Interpretation can be made at our convenience to justify our action

அஷீதா said...

பாஸ் நீங்க சொல்றது எல்லாம் சரி தான் பாஸ். இந்த திட்டத்துல எவளோ அரசியல் இருக்கு...எவனோ எவனோ நடுவுல பூந்து மக்களோட காசு தின்னுட்டு போறான்..நாம ஏன் அதை பயன்படுத்திக்க கூடாதுன்னு நினைக்கிறது தப்பு இல்லையே.

//"மனசாட்சி, மனிதாபிமானம் எல்லாம் வெத்து கதைகள் இல்லைங்க".
நம்ம வாத்தியாரோ டீச்சர்ரோ பள்ளி / கல்லூரில் வாங்கின சம்பளத்துக்கு மனசாட்சியோட பாடம் எடுத்ததால் தான் இன்னைக்கு நாமெல்லாம் நல்ல நிலைமையில் இருக்கோம். //

கருத்து நல்லா இருக்கு...ஆனா நாம இங்க பேசுவதற்கும் நீங்க குடுத்த "ஆசிரியர்கள்" உவமைக்கும் என்ன சம்பந்தம் என்று தான் புரியவில்லை.
மனசாட்சி, மனிதாபிமானம் இவை எல்லாவற்றையும் விட நமக்கு சுயநலம் தான் அதிகம். நீங்க இதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதான் இன்றைய நிலை..எனக்கு இந்த திட்டம் தேவைப்படுது நான் எடுத்துக்கிறேன் , நான் ஏன் மற்றவர்களை பற்றி கவலை படனும். எனக்காக கவலை படவே எனக்கு நேரம் இல்லை..அவனுக்கு வேணும்னா அவன் எடுத்துக்குறான் இதான் யதார்த்தம்.

இவ்வளவு ஆதங்க படும் நீங்கள், இந்த சமுதயதிர்க்காக என்ன செய்தீர்கள் என்ற கேள்வியும் எழலாம். பதிலுடன் காத்திருங்கள். :)

YUVARAJ S said...

அடுத்தவன் பண்ணுற தப்ப நாம் பண்ணும்போது, அந்த தப்பு நியப்படுதப்பட்டுவிடும்.

அதை தானே சொல்ல வரீங்க. ம்...ம்...ம் இதை தான் செய்ய வேண்டாம் என்று சொல்கிறேன்.

//எவனோ நடுவுல பூந்து மக்களோட காசு தின்னுட்டு போறான்..நாம ஏன் அதை பயன்படுத்திக்க கூடாதுன்னு நினைக்கிறது தப்பு இல்லையே.//

மக்களின் இந்த நினைப்பு தான் நம்மளை பீடித்துள்ள மிகப்பெரிய வியாதி. இத வியாதிக்கு எந்த ஒரு காப்பீடும் கிடையாது.

நான் யாரையும் சமூக சேவை செய்ய சொல்லி ஆதங்கபடவில்லை. இந்த பதிவின் நோக்கமெல்லாம்:

எதையும் துஷ்ப்ரயோகம் செயாதீர்கள்.
அடுத்தவன் உரிமையை தட்டி பறிக்காதீர்கள்.

இந்த சமூகத்துக்கு நான் என்ன செய்கிறேன் என்பதை தம்பட்டம் அடித்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அவசியம் ஏற்பட்டால் அதை ஆதாரத்தோடு தெரியப்படுத்துகிறேன்.

அண்ணாமலையான் said...

நீங்கள் தம்பட்டம் அடித்துக் கொள்ள விரும்பாதது போல அவருக்கும் எதாவது காரனம் இருக்கலாம்.. மேலும் திருடர்கள் நிர்வாகத்தில் நேர்மை எதிர்பார்ப்பதும், மக்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டியதும் என எதிர்பார்ப்பது உங்கள் தவறு... முடிந்தவரையில் நீங்கள் உங்கள் மனசாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள்.. மற்றவர்களை திருத்தும் வேலை உங்களுடையது இல்ல.. பொதுவாக சொல்லலாம்.. அவ்வளவுதான்.. குறிப்பிட்டு சொல்ல யாருக்கும் தகுதி யில்லை.. நண்றி...

YUVARAJ S said...

@ அண்ணாமலையான்,
உங்கள் வரவிற்கும் கருத்துக்கும் நன்றி.
நான் யாரையும் திருத்த முயலவில்லை . அது என் வேலையும் இல்லை. அதே சமயம் சமூகத்தில் இது போல நடக்கும் கேவலங்களை சுட்டி காட்டினால், மேற்கொண்டு இது போல நடக்காமல் தடுத்து நிறுத்த முடியுமா என்கிற நப்பாசை தான். அடுத்தவர் உரிமையை தட்டி பறிப்பது என்னை பொறுத்தவரை கேவலம் தான்.
எனக்கு இந்த தகுதி நிச்சயம் இருக்கு என்று 100 % நம்புகிறேன். நான் யாரையும் குறிப்பிட்டு சுட்டி காட்டவில்லை. அதனால் தான் ஊரும், பெரும் சொல்லாமல் அவரின் அடையாளத்தை மறைத்து பதித்தேன்.
தொடர்ந்து பேசுவோம்.......

YUVARAJ S said...

@ அண்ணாமலையான்:

உங்கள் கூற்று சரி தான். கண்டிப்பா அவருக்கும் ஒரு காரணம் இருக்கு. பிரைவேட் கம்பெனில பாலிசி எடுத்தா (லட்ச ரூபாய்க்கு) 3000 ருபாய் செலவு ஆகும். அதை மிச்ச படுத்த வேண்டாமா?

ஒருவருக்கு உள்ள உரிமையை தட்டி பறிக்காமல் இருப்பதும் நாம் அவருக்கு செய்யும் ஒரு உதவி தான்.
Its like a penny saved is a penny earned.....

மரா said...

உண்மையிலேயே யோசிக்க வெச்சுட்டிங்க.அடுத்தாட்டி அந்தாளு வந்தாருன்னா புடிச்சு போலீசுல குடுத்துட்டு உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புறேன் சார்...என்ன கொடும இது.கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டைக்கு அப்ளை பண்ணாரா? எவ்ளோ பெரிய தப்பு?நீங்க ஒண்ணும் டென்சனாகி கருடபுராணத்துப்படி ஏதும் தண்டனை குடுத்துராதீங்கண்ணே. நான் பாத்துக்குறேன்.

YUVARAJ S said...

விடுங்க மயில் ராவணன். பிள்ளை குட்டிகாரர். பிழைத்து போகட்டும். இது போல் மற்றவர்கள் செய்யாமல் இருந்தால் சரி.... என்கவுன்ட்டர் ஏகாம்பரம் ஒன்னும் ரமணா விஜயகாந்த் இல்லையே. ஸோ, அவரக்கு மன்னிப்பு உண்டு.

கருந்தேள் கண்ணாயிரம் said...

என்னோட வலைத்தளத்துல உங்க பின்னூட்டம் பார்த்தேன் . .வந்து படிச்சேன் . . நீங்கள் அழைத்ததால், என்னுடைய வெளிப்படையான கருத்துக்களை இங்கே எழுதுகிறேன்.

வெல். இலவச காப்பீடு அட்டையை அந்த நண்பர் எடுத்தது தவறு - இது உங்க வாதம். மேலே இருக்கும் பின்னூட்டங்களையும், உங்களது பதில்களையும் படித்தால், ஒன்று நிச்சயம் புரிகிறது. அதாகப்பட்டது,அந்த நண்பர் என்ன காரணத்தினால் அதனை எடுத்தார் என்பது உங்களுக்கும் சரி, எனக்கும் சரி இன்னும் எவருக்கும் சரி, தெரியாது. அது, அந்த நண்பருக்குத்தான் தெரியும். இப்படி இருக்கும்போது, ஜஸ்ட் அவரது பதிவில் அவர் எழுதிய நான்கு வரிகளை வைத்து, எப்படி அவர் மீது இப்படி உங்களது தீர்ப்புகளை வாரி வழங்க முடிகிறது உங்களால் என்பது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.

இன்னொன்று - அவரது தளத்தில் நீங்கள் போட்ட ஆங்கிலப் பின்னூட்டம் எந்தத் தொனியில் இருக்கிறது என்பதை அறிவீர்களா? என்னமோ ஒரு கொலைகாரனிடம் தார்மீகக்கேள்வி கேட்கும் ஒரு தொனி அதில் தெரிகிறது.. இதோ அதை இங்கே மறுபடி வெளியிடுகிறேன்.

‘Being a NRI, hopefully with a handful salary, how are you eligible for this insurance scheme?? I hope there is a maximum cap in the annual income for eligibility. Kindly explain gentleman! Waiting for your reply’

படித்தீர்களா? எப்படி உங்களால் இப்படி ஒரு தொனியில் சட்டென்று ஒரு தீர்ப்பு வழங்க முடிகிறது?

என்னிடம் யாராவது இந்தத் தொனியில் பின்னூட்டம் இட்டிருந்தால், நடப்பதே வேறு. இரண்டாகக் கிழித்துத் தொங்கவிட்டிருப்பேன். உங்களது தொனியினால் தான் அவர் பதில் அந்தத் தொனியில் உள்ளது.

எனவே, இந்த விஷயத்தை ட்ராப் செய்துவிட்டு, அவருக்கே நல்ல முறையில் ஒரு மின்னஞ்சல் போடுங்கள். அதன்பின், அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்தலாம்.
அதை விட்டுவிட்டு, இதைப் பற்றி ஒரு பதிவும் போட்டு, அதில் மக்களின் ஃபீட்பேக் வேறு கேட்டால், என்னுடைய மனதில் தோன்றிய வெளிப்படையான எண்ணத்தை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

என்னுடைய சிம்பிள் பதில் - ஒரே வரியில்.

’இப்புடி பிக்காளித்தனமா யோசிக்குறத நிறுத்திட்டு, போய் புள்ள குட்டிங்கள படிக்க வெய்ங்கய்யா !!’

ஜோதிஜி said...

யுவராஜ்

இந்த பின்னூட்டத்தை நீங்கள் வெளியீடுவீர்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மன வருத்ததுடன் எழுதுகின்றேன்.

நான் திருப்பூரில் ஏற்றுமதியாளராகத் தான் இருக்கின்றேன். நானும் கலைஞர் காப்பீடு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்க போகலாமா? வேண்டாமா? இது ஏழைகளுக்கு என்று சொல்கிறார்களே என்று மன உளைச்சலுடன் தான் முதலில் தயக்கத்துடன உள்ளே சென்றால் காரில் வந்து கும்பல் கும்பலாக இறங்கி உள்ளே சென்று கொண்டுருந்தார்கள். கேட்ட ஆதார புகைப்படங்கள் எளிதாக இருந்ததால் நானும் குடும்பத்துடன் எடுத்தேன். ஆனால் ஐந்துமாதங்கள் ஆகி விட்டது. இன்று வரையிலும் அந்த ஆவணம் கைக்கு வந்த பாடியில்லை.

புகைப்படம் எடுத்த காரணத்திற்கு மற்றொரு முக்கியமான விசயம் மற்ற பெரிய நிறுவனங்களில் உயர் பதவியில் இருந்தவர்கள் அவர்கள் இந்த காப்பீடு எடுத்ததோடு என்னையும் எடுக்க நிர்ப்பந்திக்கவும் செய்தார்கள்.

முக்கிய காரணம் அரசாங்கம் சம்மந்தப்பட்ட ஏதோ ஒரு ஆவணம் ஏதோ ஒரு சமயத்தில் உதவும் என்பதற்காக.

இன்று மீண்டும் ஒரு முறை உங்கள் பின்னோட்டத்தில் வந்து நிற்கும் போது என்னுடைய வலைதளத்தில் நீங்கள் வைத்த கோரிக்கை போலவே ஒவ்வொருவருக்கும் கோரிக்கை வைத்து வரவழைத்து அத்தனை பேர்களையும் வரவழைத்து சங்கடப்படுத்தியும் உள்ளீர்கள்.

தேவையா நண்பரே? தவறான விசயங்களையும், சங்கடப்படுத்தும் விசயங்களையும், எழுதி இத்தனை அவசரமாய் வரவழைத்து ஒருவருடன் ஒருவர் சங்கடப்படும் அளவிற்கு இந்த எழுத்துப் பயணம் எதை சாதிக்க உங்களுக்கு உதவப் போகிறது.

நிதானமாக யோசிங்கள் யுவராஜ். கருந்தேள் கண்ணாயிரும் போல் சொல்ல எனக்கு மனதில்லை. அது உண்மையாக இருந்தாலும் கூட.

203 தலைப்புகள் எழுதி இது வரைக்கும் அரசியல் தலைவர்களையும் கிழித்து தோரணம் கட்டிய போதிலும் எதிலும் காழ்ப்புணர்ச்சியை அடிப்படையாக வைத்து எழுதியது இல்லை. ஆனால் மொத்த காழ்ப்புணர்ச்சியையும் கப்பு அடிக்கும் வாடையாக வாந்தி எடுத்து உள்ளீர்கள்.

YUVARAJ S said...

வாங்க கருந்தேள் கண்ணாயிரம்.

உங்க கருத்துக்கு நன்றி.

அடேங்கப்பா......கொஞ்சம் கொதிச்சு போயி இருப்பீங்க போல. ஜில்லுனு ஓர் கிளாஸ் தண்ணி குடிச்சிட்டு மேல படிங்க.

உங்க வழிக்கே வரேனே. நான் கேட்ட தோணி தப்புனே வெச்சுக்குவோம். அதுக்கே இவ்ளோ கோவபடுறீங்களே, அடுத்தவன் உரிமைய தட்டி பறிப்பவன பாத்தா எங்களக்கு ஏன் கோபம் வரகூடாது? ஆண்டுக்கு லட்ச கணக்கில் சம்பளம் வாங்கும் இவர், ஏன் ஒரு மூவாயிரம் ரூபாய குடுத்து காப்பீடு எடுக்க கூடாது?? அதை செலவு பண்ண முடியாத அளவுக்கு என்ன காரணம் கஷ்டம் இருக்க முடியும்? நீங்கள் சொல்லியது போல இவரக்கு வேறு எந்த காரணமும் இருக்க முடியாது. இந்த மூவாயிரம் ரூபாய மிச்சம் படுத்துவது தவிர. யாரோ ஒரு வசதி இல்லாதவனுக்கு சேர வேண்டிய ஒரு சலுகையை தான் இவர் தட்டி பறித்து இருக்கிறார். ஒரு வேளை அந்த நபர் விபத்தில் இறக்க நேரிட்டால் (God forbidden) அவரும் ஒரு கொலைகாரனே. Passive Killer.

சமூகம் என்பது வேறு யாரும் அல்ல. நாம் தான். இது போன்ற கேவலங்களை இனிமேலாவது நடக்காமல் தடுக்கு உரிமை அனைவருக்கும் உண்டு. நீங்கள் உட்பட.

இப்படி செய்வது ஒரு இழிவான செயல் என்று எனக்கு தோன்றுவதால் தான் நான் ப்ளாக் வழியாக எடுதுரைகிறேன், அவரின் அடையாளத்தை மறைத்து. ஒரு சிலருக்கு இதெல்லாம் தவறு என்று தெரியாமல் கூட இருக்கும், நம் நண்பரை போல. என்னோட பதிவையும், அதன் பின்னூட்டத்தையும் படிக்கும் போது அந்த தவறை புரிய வைக்கும். அதற்காக தான் பதிவிட்டதும், பதிவர்களின் பின்னூட்டத்தை கேட்டதும்.

இந்த தவறை யார் செய்து இருந்தாலும், நீங்கள் உட்பட, நான் கேட்டு இருப்பேன். கிழித்து தொங்க விடுவது, யார் யாரை என்பதெல்லாம் பிறகு.

தொடர்ந்து பேசுவோம்......

YUVARAJ S said...

ஜோதிஜி,

எந்த ஒரு பின்னூட்டமும் வெளியிடும் வகையில் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் வெளியிடப்படும், நீங்கள் திட்டி எழுதினாலும் கூட. எனக்கு எந்தவித காழ்புணர்ச்சி இல்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். நான் ஒரு வங்கியில் உயர் அதிகாரியா இருக்கிறேன், கொஞ்சம் மரியாதை தெரிந்தவனும் கூட. வாருங்கள், தாரளமாக விவாதம் செய்யலாம்.

//'பெரிய நிறுவனங்களில் உயர் பதவியில் இருந்தவர்கள் அவர்கள் இந்த காப்பீடு எடுத்ததோடு என்னையும் எடுக்க நிர்ப்பந்திக்கவும் செய்தார்கள்."//
நீங்கள் சொன்ன இந்த விஷயம் எனக்கு விளங்கவில்லை. யார் எதற்காக நிர்பந்திக்க வேண்டும் என்று புரியவில்லை. எனக்கு தெரிந்த வரையில் என்னோட நண்பர்கள் / உறவினர்கள் வட்டாரத்தில் யாருக்கும் நீங்கள் சொன்ன அந்த 'நிர்பந்தம்' வந்த மாதிரி தெரியவில்லை. எதற்கும் திருப்பூரில் எனக்கு தெரிந்த ஏற்றுமதியாளர்களிடம் (நண்பர்கள்) கேட்டு தெரிந்து கொள்கிறேன். (உங்கள் ஊரில் புகழ் பெற்ற ஒரு தனியார் வங்கியில் ஆறு ஆண்டுகளுக்கு முன் வேலை பார்த்தேன். அந்த வகையில் பல ஏற்றுமதியாளர்கள் எனக்கு நல்ல அறிமுகம் உண்டு. ஒரு வேளை நீங்கள் எனக்கு தெரிந்த முகமாக கூட இருக்கலாம்)

எனக்கு யாரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை. இயல்பாகவே எனக்கு கோபம் அதிகம். சமூக கோபம் மிக அதிகம். அது தான் என்னை எழுத தூண்டியது. வேறு எந்த காரணம் இல்லை. இந்த தவறை என்னோட தெரிந்தவர் வட்டத்தில் யாரவது செய்து இருந்தால் இதை விட கடுமை காட்டி இருப்பேன், தெரிந்தவன் என்ற உரிமையில்.

"அடையாள அட்டைக்காக" மட்டும் எடுத்தேன் என்ற வாதம் ஏற்கத்தக்கல்ல. இந்த அட்டை பெற்று இருக்கும் வசதி படைத்த ஒருவர் அறுவை சிகிச்சைக்கு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டால் இலவச சிகிச்சை பெற்று கொள்ள விரும்புவாரா??
இல்லை, இது வெறும் அடையாள அட்டை தான் என்று பணம் கட்டுவாரா? கூறுங்கள்...

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை போல பகட்டாக இல்லாமல், இந்த தேசமக்கள் குறைந்தபட்சம் அடிப்படை வசதிகள் பெற்று வாழ வேண்டும் என்பது என் விருப்பம். இது நடக்க வேண்டும் என்றால், ஏழைகளுக்கு கல்வியும், சுகாதாரமும் இலவசமாக அரசு அளிக்க வேண்டும். ஒருவருடைய நியாமான உரிமையில் அடுத்தவன் தலையிடக்கூடாது.
அப்போது தான் வாழ்க்கை தரம் உயரும். தன்னால் காசு குடுத்து வாங்க முடியும் என்ற நிலையில் இருக்கும் ஒருவன் ஏழையின் வாய்ப்பை தட்டி பறிப்பதை பார்க்கும் போது என் போன்றோரால் கோப படாமல் இருக்க முடியாது. தான் செய்வது தப்பு என்று தெரியாமலே நம்மில் பலர் உள்ளனர். இதில் மெத்த படித்த மேதாவிகளும் அடக்கம். அவர்களுக்கு எல்லாம் இது தவறு என்று புரிய வேண்டும். இது தான் நான் சாதிக்க விரும்புவது.

நான் எதையும் தவறாக எழுதவில்ல தோழரே... என்னோட மனசாட்சி படி தான் நான் நடக்கிறேன்.

ஆனால் ஏதோ ஒரு வகையில் நீங்கள் தர்ம சங்கட நிலைக்கு உள்ளாக்கப்பட்டு விட்டதாக அறிகிறேன். அதற்க்கு என்னோட ஆழ்ந்த வருத்தங்கள் . மன்னிக்க.

சம்பந்தப்பட்ட யாரும் எனக்கு இதற்கு முன் அறிமுகம் ஆனவர்கள் இல்லை. எனவே இங்கு காழ்புணர்ச்சிக்கும் இடம் இல்லை. நான் வாந்தி எடுத்ததாக நீங்கள் கருதினால் என்னை அது வருத்தம் அடைய செய்யாது.


மேலும் பேசலாம்.
(உங்க ஊரு திருப்பூர் நு கேள்விபட்டதுல நெம்ப சந்தோசங்கனா..)

ஜோதிஜி said...

உங்கள் மரியாதைக்கு நன்றி. திருப்பூரில் பணி புரிந்தவர் என்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி.

15 வருடங்களாக ரேஷன் கார்டுக்காக போராடிக்கொண்டுருக்கும் என்னுடைய கஷ்டம் உங்களுக்கு புரியாது.

நிர்ப்பந்தம் என்பது நான் தனிப்பட்ட முறையில் பட்டுக்கொண்டுருக்கும் அவஸ்த்தைகள் உணர்ந்தவர்கள் கொடுத்த அக்கறையின் வெளிப்பாடு.

மற்றொரு விசயம் உங்களுக்காக,

பத்திரிக்கையில் இதன் மூலம் பலன் அடைந்தவர்கள் என்று பலரையும் பார்த்து இருக்கின்றேன். என்னுடைய நெருங்கிய வட்டாரத்தில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மருத்துவமனைகளில் இதனை சேர்த்து வசூலிக்க உதவும் ஒரு அட்டையாக பயன்படுத்தி அட்டைப்பூச்சியாக உறிஞ்சு கொண்டு இருக்கிறார்கள்.

திருப்பூர் மருத்துவமனைகள் பற்றி நீங்கள் அறிந்ததே.

மற்றொரு விண்ணப்பம். எவர் பதிவில் உங்கள் மாற்றுக்கருத்தை உங்கள் சமூக கோபத்தை வார்த்தைகளால் எழுதும் சூழ்நிலை உருவானால் அவர்கள் பழைய பதிவுகளையும் படித்துப் பாருங்கள். வந்த பின்னோட்டத்திற்கு அவர் கொடுக்கும் விளக்கத்தையும் ஊன்றி கவனித்துப் பாருங்கள்.

உங்களைப் போலவே எழுதியவருக்கும் ஏதோ ஒரு அக்கறை இருக்கலாம் அல்லவா?

முகம் தெரியாமல் முகவரியும் தெரியாமல் எத்தனையோ நட்புகளை இந்த இடுகை பெற்றுத் தந்துள்ளது. அவர்களைப் போலவே நீங்களும் வளர வாழ்த்துகள்.

ஏறி மிதித்து செல்ல வேண்டாம்.
இணைந்து பயணம் செய்யுங்கள்.

YUVARAJ S said...

தம்பி கருந்தேள்,

ஆபாசமாக பேசினால் மட்டும், பேசுவதெல்லாம் சரியாகிவிடாது. எனவே உங்கள் பின்னூட்டம் வெளியிடப்படவில்லை. ராபின் ஹூட்டோ, இந்தியன் தாத்தாவோ, ரமணாவோ தான் கோபபடனும் என்று எதுவும் சட்டம் இல்லை. இந்த நாட்டின் மேல், சமூகத்தின் மேல் அக்கறை உள்ள எல்லோருக்கும் வரும்.

நான் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை. அடுத்தவனை எய்த்து / ஏமாற்றி பிழைக்கவில்லை. அடுத்தவனுக்கு உபத்திரவம் செய்யாமல் இருப்பதும் ஒரு உதவிதான். என்னால் இயன்ற நேரடி உதவிகளையும் செய்து தான் வருகிறேன். உங்கள் மின் அஞ்சல் முகவரி குடுங்கள். சில ஆதாரங்களை அனுப்பி வைக்கிறேன். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.

சுயநலவாதிகள் இருக்கும் வரை இந்த நாடு வல்லரசு ஆகப்போவது இல்லை. அதிக பட்சம் விஜயகாந்த் நடித்த 'வல்லரசு' படம் தான் பாக்க முடியும்.

நான் பிடித்த முயலுக்கு 'ஏதோ' ரெண்டு இருபதாக சொன்னேன்களே, 'அது' கருந்தேளுக்கு ஒன்னு கூட இல்லை. 'அப்படி' 'இப்படி' கொஞ்சம் பாத்தே நடந்துக்குங்க. மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடினு ஒரு பழமொழி இருக்கு.

YUVARAJ S said...

@ கருந்தேள்!

உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.

//அதே மாதிரி, பின்னூட்டத்த வெளியிடாம, அதுல ஆபாசம் இருக்குன்னு இன்னொரு உளறல்.. சரி.. நீங்க ஆபாசம்னு நினைச்ச அந்த ரெண்டு எழுத்துக்களை நீக்கிட்டு, அந்தப் பின்னூட்டத்த இங்கே குடுத்துருக்கேன்.. இப்ப அத வெளியிடுங்க.//

ஆபாசமான வார்த்தை உள்ள ஒரு பின்னூட்டத்தை போட்டுவிட்டு அதை வெளியிடவில்லை என்று சண்டை பிடிக்கிற ஒரு ஆளு உலகத்துலேயே எனக்கு தெரிஞ்சு நீங்க தான் போங்க. ஒரு வேளை பண்ணுங்க. அந்த ரெண்டு எழுத்து வார்த்தைய ஒரு பெண் பதிவருக்கு பின்னூட்டமாக போட்டுவிட்டு, அதை அவர் வெளியிட்டால், நீங்கள் என்ன எழுதினாலும் நான் வெளிஇடுகிறேன்.

ஆபாசமாக எழுதிவிட்டு வருத்தம் தெரிவிக்காவிட்டாலும் பரவில்லை, ஏண்டா வெளியிடல நு கேக்கறீங்க பாருங்க....செம காமெடி பீசு மா. ...முடியல வயற வலிக்குது.

செய்த உதவியை ஊரறிய தம்பட்டம் அடிக்கும் பழக்கம் யாருக்காவது இருக்கலாம். எனக்கு அது இல்லை. . நீங்க மீண்டும் மீண்டும் அது பற்றி நோண்டி கேட்பதால் உங்களுக்கு மட்டும் தெரிவிக்க உங்கள் மினஞ்சல் முகவரியை கேட்டேன். பயம் வேண்டாம், உங்களை போல சல்லித்தனமாக ஆபாச மொழியில் எழுத மாட்டேன்.

நான் அந்த நண்பருக்கு கேட்ட கேள்வியின் தொனியில் கோபம் வெளிப்பட்டது. உண்மை. அதில் ஆபாசமோ, அநாகரிகமான / மரியாதை குறைந்த சொற்களையோ உபயோகிக்கவில்லை.

GROW UP GENTLEMAN

வளர முடியலையா?. அம்மாவ complan குடுக்க சொல்லுங்க.

YUVARAJ S said...

@ கருந்தேள்

நீங்கள் ஆபாசாமாக / அநாகரீகமாக / மரியாதை குறைவாக தான் பின்னூட்டம் இடுவேன் என்று அடம் பிடித்தால், நிச்சயம் அதை நான் வெளி இட மாட்டேன். நீங்கள் பெசுகுறீர்கள் என்பதற்காக, நான் தரம் தாழ்ந்து எழுத முடியாது. இதை நான் எத்தனை முறை தான் சொல்வது?

நீங்களும் தாராளமாக பதிவிடலாம். அது உங்கள் விருப்பம். அதுக்கு எதுக்கு தொண்டை வத்த கத்திகிட்டு?? உருட்டல்? மிரட்டல்? கிழிப்பேன்?

விவாதம் செய்ய நான் தயாராக இருக்குறேன். நான் செய்தது தவறு என்று விவாதத்தில் நீங்கள் வென்றால், நான் பதிவு எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்.

எப்பவும் போல வார்த்தைகள் தடித்தால், அவை வெளி இடப்படமாட்டாது.

சந்திப்போம்.

கருந்தேள் கண்ணாயிரம் said...

ஹாஹ்ஹா . . ;-) காமெடி பீஸின் அடுத்த உளறல்.. ;-)

தம்பி.. நான் தான் சொன்னனே. . உன்ன மாதிரி ஆளுங்கள பதிவு போட்டு இலவச விளம்பரம் தேடித்தர்ரது எனக்குப் புடிக்காதுன்னு . . ஆல்ரெடி இங்க யாரும் பின்னூட்டம் போடுறதில்லை.. நான் மட்டும் தான் போட்டுக்கினு இருக்கேன்.. அதுவும், நீங்க பண்ண முட்டாள்தனத்தைப் புரிய வெக்கத்தான்..

ஸோ, யாருமே படிக்காத, யாருமே பின்னூட்டமிடாத ஒரு ப்ளாக் என்ற வாந்தியை, என்னுடைய பதிவில் எழுதி, அதை மக்கள் படிக்க வைக்கும்படி நான் செய்யப்போவதில்லை. இங்கே நீங்கள் என்ன வேண்டுமானலும் உளறலாம். என்னுடைய பின்னூட்டங்களில் வாங்கிய கிளியை ஆயுளுக்கும் மறக்க மாட்டீர்கள் என்று உங்களது பம்பிப் பதுங்கும் பதில்களைப் படித்தாலேயே தெரிகிறது. . அதை நீங்கள் பப்லிஷ் செய்தால், ஒரு பயல் உங்கள் சைட்டைப் படிக்க மாட்டான் ;-) உங்களது உண்மை முகம் (வயித்தெரிச்சல்) தெரிந்து.. ;-)

ஸோ, நான் இங்கிருந்து விலகிக் கொள்கிறேன். எனக்குப் பல வேலைகள் இருக்கின்றன. யாருக்கும் தெரியாமல் உங்கள் வழக்கப்படியே பம்மிக்கொண்டு பம்பிப்பம்பி பதிவு போட்டுக்கொண்டிருங்கள் ;-) ஆனால் என்னுடைய வலைத்தளம் பக்கமே வந்துவிடாதீர்கள். அதில் உங்களது வாந்திப் பின்னூட்டங்களை நான் பார்த்தால், அப்புறம் இருக்கிறது கச்சேரி.

பை பை..

YUVARAJ S said...

நீங்க எந்த அளவுக்கு 'மரியாதையாக' எழுதுறீங்கனு தெரியவேண்டும் என்பதற்காக தான் மேற்கொண்ட பின்னூட்டம் வெளியிடப்படுகிறது.

எ. ன்னோட எந்த பதிவுக்கும் நான் விளம்பரம் தேடியதில்லை. அது போன்ற தவறு நடக்ககூடாது என்பதற்காக தான் அந்த ஒரு பதிவை மட்டும் அடுத்தவருக்கு பின்னூட்டம் இட்டேன். வேறு எந்த பதிவும் இப்படி இட்டதில்லை.
௨. நான் டைரி எழுதுவதற்கு பதிலாக ப்ளாக் எழுதுகிறேன். இத்தனை லட்சம் ஹிட்ஸ் பெற வேண்டாம், இத்தனை பேர் என்னை follow செய்ய வேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்கு கிடையாது. என்னோட ப்ளாக், எப்படிபட்டவர் படிக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்கிறேன். அது உங்கள் வேலை இல்லை.

௩. நான் செய்தது முட்டாள் தனம் என்றால், புத்திசாலிதனமாக செயல்படும் அந்த நண்பருக்கும், ஆதாரிக்கும் உங்களுக்கும் ஒரு பாராட்டு விழா எடுக்க்கலாம். உங்களை போல புத்திசாலியாக இருக்க நான் என்றும் விரும்பவில்லை. புத்திசாலியாக சமூக தவறு செய்வதைவிட முட்டாளாக இருப்பதே மேல் என்பது என்னோட நிலைப்பாடு.

௪. எனக்கு வயிதெரிச்சல் தான், மிக உண்மை. தனக்கு உரிமை இல்லாத ஒன்றை ஒருவன் புடுங்கி திங்கும் போது எனக்கு ஆத்திரத்தில் எரியத்தான் செய்யும்.

௫. உங்கள் அதிகார தோரணை வேறு எங்காவது வெச்சுகோங்க. இங்கே எல்லாம் செல்லுபடி ஆகாது. நீங்கள் சொன்ன அதே தான் உங்களுக்கு. இனிமேல் அநாகரீகமாக பின்னூட்டம் போட்டால் அதே வழியில் தக்க பதில் தரப்படும், உங்கள் பதிவிலேயே.
There is a limit for everything.

ஒழுங்காக பேசி இருந்தால் நன்றாக விவாதித்து இருக்கலாம். தரமிழந்த கருத்துக்களை நீங்கள் உமிழ்து அது திசை மாறி போய்விட்டது.