Friday, August 27, 2010

சுங்க சோதனை! ஒரு மலேசிய அனுபவம்....

இது சென்ற ஏப்ரல் மாத கடைசியில் நான் மலேசியா வழியே இந்தியா வந்த போது ஏற்பட்ட அனுபவம்.



சவுதியில் என்னோட வங்கியில் பணிபுரிந்த ஒரு நண்பருக்கு (அவன் ஒரு சவுதி) மலேசியாவில் ஒரு சின்ன வியாபார தொடர்பு இருந்தது. அது பற்றி மேற்கொண்டு விபரங்கள் சேகரிக்க அவனால் போக இயலவில்லை. எனவே, என்னை போக இயலுமா என்று கேட்டுக்கொண்டான்.



விஷயம் இது தான். அவன் புதிதாக ஒரு VALVE REPAIR UNIT துவங்க எண்ணி உள்ளான். இதற்கு வேண்டிய தொழில்நுட்பத்தை ஒரு மலேசியா நிறுவனம் தர முன்வந்தது. அந்த நிறுவனத்துக்கு அதற்க்கான கட்டமைப்பு இருகிறதா என்று பார்த்து வர வேண்டும். அந்த நிறுவனம் ஒரு சீனனுக்கு சொந்தமானது. மார்ச் மாதம் ஜுபைல் நகரத்தில் நடந்த ஒரு கண்காட்சியில் என்னோட நண்பனுக்கு இவர்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அவர்கள் கேட்ட தொகை ( TECHNICAL FEES ) ரொம்பவே அதிகமாக இருந்தது. எனினும், நண்பனுக்கு வியாபாரத்தை விட்டு விட மனம் இல்லை. எனவே, ஒருமுறை, அவர்களின் தொழிற்கூடத்தை பார்வை இட்டு பின்பு பேரம் பேசலாம் என்று எண்ணினான்.



பஹ்ரைனிலிருந்து ஏப்ரல் 28 ஆம் தேடி கோலாலம்பூர் செல்ல வேண்டி இருந்தது. நான் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு செல்வது வழக்கம். இந்த முறை மூக்கை தொட்டு, மலேசியா வழியாக!. நம்ம பசங்க கண்டிப்பா BLUE LABEL என்ற அறிய பொக்கிஷத்தை நிச்சயம் வாங்கி வரவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டனர். சரக்கு பஹ்ரைன் DUTY FREE ஷாப்பில் கிடைக்கவில்லை. பயணம் செய்த விமானத்தில் இருந்தது. எனவே வாங்கி என்னோட கைபையில் வைத்து கொண்டேன். பொதுவாக, விமான பயணத்தில் (தனியாக போகும் பொழுது) கைபொதி மட்டும் வைத்து கொள்வது வழக்கம். அதற்கு காரணம், ஒரு முறை பட்ட சூடு!!!!. வேறு ஒரு சந்தர்பத்தில் அதை பற்றி எழுதுகிறேன்.



விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ( KLIA ) தரை இறங்கியது. சவுதி குடிஉரிமை அட்டை வைத்து இருந்ததால் எனக்கு 120 மணிநேர ட்ரான்சிட் விசா கிடைத்தது. திரும்பும் போது பெரிய பல்பு வாங்குவேன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.



ஹோட்டல் ரூம் ஏற்கனவே புக் செய்தாகிவிட்டது. எனக்கு வண்டி ஓட்டுவது கொள்ளை இஷ்டம். எனவே, ஒரு RENT -A -CAR முன்பதிவு செய்து இருந்தேன். இறங்கியவுடம் வண்டி தயாராக இருந்தது. மலேசியாவை பொறுத்த வரை எனக்கு முதல் அனுபவம். காரில் GPS பொருத்த சொல்லி இருந்தேன். செய்து இருந்ததால் வண்டி ஓட்ட மிக சுலபமாக இருந்தது.



சென்ற வேலை, ஒரே நாளில் முடிந்தது. இறங்கிய அன்றே ஜோஹோர் பஹ்ரு சென்று அவர்களின் தொழிற்கூடத்தை பார்வை இட்டு சில படங்களையும் எடுத்துக்கொண்டேன். நண்பனிடமும் பேசினேன்.



மறுநாள், நன்றாக ஊர் சுற்றி விட்டு, மூன்றாவது நாள் காலை KLIA நோக்கி, காரை செலுத்தினேன். அறையை காலி செய்யும் போது ஒரு பத்து மணி இருக்கும். இரண்டு மணிக்கு தான் விமானம். விமான நிலையம் செல்ல ஒரு 40 நிமிடம் மட்டுமே. எனவே, போதுமான அவகாசம் இருந்தது. KLIA சென்றவுடன், காரை திருப்பி குடுத்து பில் செட்டில் செய்தேன். போர்டிங் பாஸ் போடுவதற்கு கவுன்ட்டர் தேடினேன். எங்கேயும் காணவில்லை. ?????



மணி இப்போ 11 . 30 ஆகி இருந்தது. எனக்குள் லேசான பதட்டம். விமான நிலையத்தின் ஒரு மூலையில் AIR ASIA போர்ட் தென்பட்டது. ஆவலாக ஓடி போயி போர்டிங் பாஸ் கேட்டேன்.



அந்த பெண்மணி, என்னை நக்கலாக ஒரு சிரிப்பை உதிர்த்தாள், ஊருக்கு புதுசா என்பதை போல!!!. வரும்போது எந்த விமானத்தில் வந்தாய் என்று கேட்டாள். நான் GULF AIR என்றேன். அதனால் தான் நீ KLIA வந்து இறங்கினாய். AIR ASIA விமானம் இங்கே வராது. அதற்க்கு LCCT டர்மினல் போக வேண்டும் என்றாள். வேறு டர்மினல் என்றவுடன் அக்கம் பக்கம் எங்காவது இருக்கும் என்று நினைத்தேன், நம்ம ஊரை போல. என் எண்ணத்தில் ஒரு இடி இறக்கினாள். LCCT இங்கிருந்து கிட்டதிட்ட 40 கீ.மி தாண்டி SEPANG அருகில் உள்ளது. கீழே போனால் பேருந்து கிடைக்கும், ஓடு என்று சிரித்தாள்.



வேறு வழி?? நானும் ஓடினேன். பேருந்து ஏறும்போது மணி 12 .10 . டிரைவரோ என்னோட அவசரம் புரியாமல் நிதானமாக செலுத்தினார். ஒரு மணிக்கு பேருந்து சென்று அடைந்தது. அடித்து பிடித்து போர்டிங் கார்டு வாங்கினேன். கொஞ்சம் ஷாப்பிங் செய்ததால் ஏழு கிலோவாக இருந்த கைபொதி பத்து கிலோ ஆகிவிட்டு இருந்தது. என்னிடம் வேறு பொதி இல்லாததால், அதை கைபொதியாக கொண்டு செல்ல அனுமதிக்கபட்டேன். மணி 1 .15 . கையில் போர்டிங் கார்ட் இருந்ததால் தைரியமாக இருந்தது.



இம்மிகிரேஷன் கூட்டமாக இருந்தது. எனவே, அதன் மேலதிகாரியை சந்தித்து நிலைமையை விளக்கினேன். அவரே உதவினார். இனிமே ஒரு சிரமமும் இல்லை என்று சீட்டி அடித்தபடி சுங்க சோதனை அடைந்தேன்.



என்னோட கைபொதி ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்கேன் பார்த்து கொண்டு இருந்தவன் மலாய் மொழியில் ஏதோ கத்த, என்னோட கைபொதி மட்டும் தனியே அப்புறபடுத்தப்பட்டது. முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. சில வினாடிகளில் நன்றாக உறைத்தது. எல்லாம் நான் வாங்கின ப்ளூ லேபிளின் திருவிளையாடல் தான். சரக்கை அனுமதிக்க மறுத்து விட்டான். இதில் சிரிப்பு என்னவென்றால், சுங்க சோதனை முடித்த உடனே, சரக்கு கடை உண்டு. அங்கே வாங்கினால், கூட கொண்டு செல்லலாம். அனால் வெளி சரக்குக்கு அனுமதி இல்லை.



200 டாலர் மதிப்புள்ள சரக்கை அங்கேயே விட்டு செல்ல மனம் இல்லை. எனக்கு எதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். உனக்கு 5 நிமிடம் தருகிறேன். ஓடிபோயி உன்னோட கைபொதியை செக்-இன் செய்து விட்டு வா. இதற்க்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது என்றான். நான் ஏற்றுக்கொண்டேன். கூடவே இம்மிக்ராஷன் வரை வந்தான். என்னோட பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டது. நான் ஓடிபோயி செக்-இன் கவுண்டரை அடைந்தேன். அவனும் முனகிக்கொண்டே செய்ய ஒத்துகொண்டான். இதற்குள் என் பெயரை ஒலிபெருக்கியில் கூவினார்கள். சொல்லுறது என் பேருதான், பொதி வந்துடுமா என்று கேட்டேன். அதெல்லாம், வரும் என்று தெனாவட்டாக ஒரு பதில் வந்தது.



மீண்டும் இம்மிக்ராஷன் வந்து, பாஸ்போர்டை பெற்றுக்கொண்டு, சுங்க சோதனையை முடித்து, போர்டிங் கேட் நோக்கி ஓடினேன். இதற்குள் இரண்டாவது முறையாக என்னோட பெயர் ஏலம் விடபட்டது. அடித்து பிடித்து விமானாம் ஏறி அமர்த்தும், ஒரு பெரிய தவறு செய்தது தெரிந்தது.



பதட்டத்தில் நான் என்னோட பையை பூட்டவே இல்லை. சரக்கையும் அவசரத்தில் மேலேயே வைத்து இருந்தேன். பட்ட கஷ்டம் எல்லாம் பாழாகி விடுமோ என்று ஒரு பதபதைப்பு. திருச்சி இறங்கியதும் என்னோட பை தான் கடைசியாக வந்தது. எனக்கு சுத்தமாக நம்பிக்கையே இல்லை. உலக அதிசயமாக, எல்லா பொருளும் பரம பத்திரம், ப்ளூ லேபில் உட்பட.



நீதி: ட்ரான்சிட் பயணத்தில் சரக்கு கையில் கொண்டு போக கூடாது.

Wednesday, July 7, 2010

உலக கோப்பை கால்பந்து 2010 ! ஜெயிக்க போவது யாரு?

This world cup is already determined by the numbers....


1. Brazil won the World Cup in 1994; before that they also won in


1970.Adding1970 + 1994= 3964


2. Argentina won its last World Cup in 1986; before that they also won


in 1978. Adding 1978 + 1986= 3964


3. Germany won its last World Cup in 1990; before that they also won


in 1974. Adding 1974 + 1990= 3964


4. Brazil also won the World Cup in 2002; before that they also won in


1962. Adding 1962+ 2002= 3964


5. Therefore if you want to know what nation is going to win the World


Cup in 2010, you only have to subtract 2010 from the magic number that


we have determined: 3964....


3964 minus 2010 = 1954... .................


.
.
.
.
.
.
.
.
.
.
.




In 1954 the World Cup was won by Germany !


Lets wait and see, if this works out!

 
(Firdaus சித்தப்பு அடிச்சிவிட்ட forward  மெயிலோட நகல் தான் மேலே)
 

Tuesday, July 6, 2010

இவர் உங்கள் உதவியை எதிர்பார்க்கிறார்!

டாக்டர் கனவு கைகூடியும், பணமில்லாததால் இடைப்பாடி மாணவர் ஒருவர் செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார்.



சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே மல்லிபாளையத்தை சேர்ந்தவர் சித்தையன்(47). அவரது மனைவி மாரியம்மாள் (45). போடிநாய்க்கன்பட்டி செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர். அவர்களது மூன்றாவது மகன் கோவிந்தராஜ், கடந்த கல்வி ஆண்டில் இடைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.பொதுத்தேர்வில் தமிழ்- 182, ஆங்கிலம்- 132, கணிதம்- 177, இயற்பியல்- 197, வேதியியல்- 200, உயிரியல்- 191 என 1,079 மதிப்பெண் பெற்றார். கட் - ஆப் மார்க் 194.75 பெற்றதால், மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளார்.

கடந்த 1ம் தேதி நடந்த மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்றார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. வரும் 21ம் தேதி கல்லூரியில் சேர வேண்டும். ஆனால், வசதியில்லாததால் சீட் கிடைத்தும் படிக்க முடியாத நிலையில் கோவிந்தராஜ் உள்ளார்.

இது குறித்து மாணவர் கோவிந்தராஜின் டியூஷன் ஆசிரியர் பிரகாஷ் கூறியதாவது: மாணவர் கோவிந்தராஜ் மிகவும் ஏழை. பொதுத்தேர்வில் மருத்துவ படிப்புக்கு கட்-ஆப் 194.75 எடுத்துள்ளார். மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளார். செங்கல் சூளையில் வேலை செய்து 7,000 ரூபாய் சேமித்து வைத்துள்ளார். அவரது படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

( படிக்க வசதி இல்லாத இந்த மாணவருக்கு உதவ தினமலர் வாசகர்கள் பலர் முன் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

எஸ்.கோவிந்தராஜ், த/பெ. சி்த்தையன், 4/149, மல்லிபாளையம், போடிநாயக்கன்பட்டி அஞ்சல், இடைப்பாடி தாலுகா- 637 105; மொபைல்: 96882 26467

வங்கியின் அக்கவுண்ட் எண் : 31245117385
வங்கியின் பெயர்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இடைப்பாடி கிளை
IFSC  CODE : SBIN 0002213

நன்றி: தினமலர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=32243

Tuesday, June 29, 2010

ராவணன் விமர்சனம் - ஒரு புதிய கோணம்!

ராவணன் - மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ஆவலாக போன  பல பேருக்கு கல்ப்பாக பல்பு குடுத்த படம்
எல்லோரும் பதிவுல போட்டி போட்டுகிட்டு பிரிச்சு மேயறாங்க.
இதில் நான் இயக்குனர் தகரம் முனிரத்னம் அவர்களை குற்றம் சொல்ல மாட்டேன். ஏன்னா, அவர் ரொம்ப நல்லவர், உண்மை பேசுபவர்.  சத்தியவான்.

எப்படின்னு கேளுங்க சொல்லுறேன்.

ஆங்கிலத்தில் PORTMANTEAU வகை சொற்கள் உண்டு. PORTMANTEAU என்றால் இரண்டு வார்த்தைகள் கலந்து ஒரு புதிய வார்த்தையை உருவாக்கும். எடுத்துக்காட்டாக, MOTEL என்பது நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தை /  தங்கும் விடுதியை  குறிக்கும் ஒரு சொல். அது MOTORWAY + HOTEL ஆகிய இரண்டு  சொற்கள் இணைந்த ஒரு PORTMANTEAU .

இது போல, ராவணன் என்பது ஒரு தமிழ் PORTMANTEAU . (எங்க சுத்தி எங்க வரோம் பாத்தீங்க இல்ல)
ராவணன் - அதாவது, இந்த சொல்லை நன்றாக பிரித்து பார்த்தால் ராவ +  வந்தவன் என்றே பொருள் வருகிறது. நம்மை எல்லாம் உயிரோடு ராவுவதற்க்கே (அறுப்பதற்கே) இயக்குனர் தகரத்தால் எடுக்கப்பட்ட படம்.

தான் படம் எடுத்ததன் நோக்கத்த சாமர்த்தியமா டைடிலுகுல்லையே ஒளிச்சு வெச்சு சொல்லி இருக்கிறார்.

மடப்பசங்க எல்லோரும் (நானும் சேத்தி தான்) டைடில சரியாய் புரிஞ்சிக்காம, வரிஞ்சி கட்டி வரிசைல நின்னு, ராமாயணம் ரீமேக்கு, இயக்குனர் தகரம் எடுத்து இருக்காரு போயி பாத்துட்டு, மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி திரியரிங்க.

எல்லோரும் அவர விடுங்க பா.......ஏன்னா அவர் ரொம்ப நல்லவர்.....டைட்டில்ல உண்மைய தான் சொல்லி இருக்காரு.....

( படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே நானும் நண்பர்களும் கார் எடுத்துகிட்டு ஒரு மணி நேரம் ஒட்டி, ரெண்டு மணிநேரம் இம்மிக்ரேஷன் வரிசியைல நின்னு பஹ்ரைன் போயி (நாடு விட்டு நாடு!!!)  முதல் ஷோ பாத்தோம்........ )

சேம் ப்ளட் யா. ஸோ, கூல் டௌன் கூல் டௌன்!!!!

Wednesday, June 23, 2010

மயில் கோழியான கதை!!!

இன்று மதியம் உணவு அருந்த நானும் நண்பர் குமாரும் மதீனா உணவு விடுதிக்கு போன பொழுது நடந்தது இது.

சாப்பிட்டு விட்டு பணம் குடுக்க போனபோது வழக்கம் போல நம்ம முபாரக் பாய் எவனடா வம்பு இழுக்கலாம் என்று கல்லாவில் காத்துக்கொண்டு இருந்தார்.

நண்பர் குமார் புதிதாக வந்ததால், அவரை பார்த்து," சார் புதுசா இருக்கீங்க, நமக்கு எந்த ஊரு" என்று கேட்டார்.

"முதல்ல உம்மோட ஊற சொல்லும் வோய்" 

"நமக்கு மயிலாடுதுறை சார்"

வூடு கட்ட களம் அமைச்சு குடுத்தாச்சு. நாம சும்மா இருப்போமா??

" பாய், ஒரு சின்ன சந்தேகம், உங்க ஊருல நெறிய மயில் ஆடுமா? பேரு அமர்களமா மயில் ஆடும் துறைன்னு  இருக்கே???"

" ஆமாங்க, எங்க ஊரு அவ்ளோ சிறப்பான ஊரு"

" பாய், ஆடுறது எல்லாம் ஆம்பளை மயிலா இல்ல பொம்பள மயிலா?"

(பெண் மயிலுக்கு தோகை இல்லை, ஆண் மயிலுக்கு தான் தோகை உண்டு. அவர் பெண் மயில் என்று சொல்லி வாயாக்குடுதால் மடக்கலாம் என்று பிளான்)

" எந்த மயில் ஆடுனா என்ன? அது ரெண்டு காலுல ஆடப்போவுது" என்று முபாரக் சமாளிக்க பார்க்க.....

விடுவோமா நாங்க!!!

" ஹலோ, பாய், தோகை விரிச்சு ஆடுன அதுக்கு பேரு மயில். இல்லாட்டி அது ஒரு வளந்த,  பெரிய கோழி. ஸோ, இனிமே உங்க ஊரு பேரு கோழியாடும்துறை. யாரவது ஊரு பேரு கேட்டா, இப்படியே maintain பண்ணுங்க.  வரட்டா.....என்று பில் செட்டில் பண்ணி நடையை கட்டினோம்.

பின்னால் பாயின் குரல் கேட்டது. " இவங்க வெறிய தீத்துக்க இன்னைக்கு நாம தான் சிக்கினோம் போல!!!!!!!"

நாங்கெல்லாம் தீப்பொறி திருமுகத்தையே ரத்த திருமுகம் ஆகுனவுங்க......

Saturday, June 19, 2010

இப்படி வந்து மாட்டிக்கிட்டேன்!

டிசம்பர் 1 , திங்கட்கிழமை, நான் சேர்ந்தேன். டிசம்பர் 3 தான் கடைசி வேலை நாள். மீண்டும் அலுவலகம் டிசம்பர் 13 திகதி தான்.

காரணம்?  ஹஜ் விடுமுறை.!!!!

சத்திய சோதனை!


கடவுச்சீட்டை வாங்கிக்கொண்டு அரபி மொழியில் ஒரு லெட்டர் குடுத்தார்கள். இன்னார், இந்த வங்கியில் வேலை செய்கிறார். அவருடைய iqama  (குடிஉரிமை அட்டை)  நாங்கள்  வழங்க ஏற்பாடு செய்வதால், அவரிடம் வேற எந்த அடையாள அட்டையும் இல்லை என்று எழுதி இருந்தது.


வங்கியில் குடுத்த கடிதத்தை எப்போதும் (ஒரிஜினல்) கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், எங்காவது போலீஸ் அல்லது முத்தவா (religious police ) கேட்டால் காட்ட வேண்டும் என்றும் சொன்னார்.


ரியாதில் சில நண்பர்கள் இருப்பதால், அங்கே போகலாம் என்று ஒரு திட்டம் போட்டேன். அதற்க்கும் வேட்டு வைத்து விட்டார்கள். இங்கே iquama  இல்லாமல் எங்கும் செல்ல முடியாது. ஏன், பஸ் அல்லது ரயில் டிக்கெட் கூட வாங்க முடியாது!!! மேலும் ரியாத் போகும் வழியில் சில செக் பாயிண்ட் இருப்பதாவும், சில சமயம் போலீசார் அந்த கடிதத்தை (குறிப்பாக ஊரு விட்டு ஊரு போனா) மதிக்க மாட்டார்கள் என்று சொல்லி தடுத்து விட்டனர்.


பத்து நாள் இருக்கே, பேசாம ஊருக்கு போயி வரலாம் நு கேட்டேன். அய்யே....., நீ நெனக்குற மாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு போயிட்டு வர முடியாது. எங்க நாட்ட விட்டு வெளிய போகனும்னாலும் எக்ஸிட் விசா வேணும், iquama இல்லாம ஒன்னும் பண்ண முடியாது... BAD LUCK என்று சொல்லிவிட்டார்கள்.

நான் எந்த முடிவு எடுத்தாலும் அது iquama என்ற முட்டுச்சந்தில் வந்து நின்றது.

ஸோ, பத்து நாள் நான் complete ஹவுஸ் அர்ரெஸ்ட். எங்கும் போக முடியாது.

உலகத்துலேயே ஒரு நாட்ட விட்டு வெளியேற விசா கேக்குற ஒரு நாடு சவூதியா தான் இருக்கும்.

ஆபீஸ் கார் வேணும்னா பயன் படுத்திக்கோங்க, என்று சொல்லி டிரைவர வர வழைத்தார்கள். வந்தவர் பேரு ஜாவித், ஒரு பாகிஸ்தானி. எனினும், அவருக்கும் அஞ்சு நாள் ஹஜ் விடுமுறை இருப்பதாகவும், மற்ற நாட்களில் தேவைப்பட்டால் கூப்பிடுங்கள் என்று சொன்னார். முதலில் அவரை ஒரு நல்ல இந்திய உணவு விடுதிக்கு அழைத்து செல்ல சொன்னேன். மதினா உணவு விடுதியை அறிமுகம் செய்து வைத்தார். தஞ்சாவூர்கார்கள் நடத்துகிறார்கள், ஓரளவுக்கு பரவா இல்லை. இருவரும் உணவு அருந்தி கிளம்பினோம். பின்னர், வரும் வழியில் ஒரு சிம் கார்டு வாங்கினேன்.

நல்ல மனுஷன், முன் பின் தெரியாத என்னை நம்பி அவரோட iquama காபியை சிம் வாங்க குடுத்தார். நமக்கு தான் அந்த எழவெடுத்த iquama இல்லையே. பின்னர் ஆபீஸ் நோக்கி பேசிக்கொண்டே போக ஆரம்பித்தோம்.


ஸாப், நான் சாயங்காலம் உங்களை ரூம்ல டிராப் பண்ண வரவா என்று கேட்க, ஒன்னும் வேண்டாம் ஜாவித் பாய், நாலு பில்டிங் தாண்டி தானே ஹோட்டல் நான் நடந்து போய்கிறேன் என்று சொன்னேன்.


ஜாவித், இனிமே என்னை 'ஸாப்' என்று கூப்பிட வேண்டாம். நீயும் என்னோட வயதுக்காரன் தான். என்னை பெயர் சொல்லியே அழைக்கலாம் என்று சொன்னேன். என்னை புன்னைகைதபடி ஒரு பார்வை பார்த்தான். க்யா ஹுவா ரே என்றேன். ஒன்னும் இல்லை யுவராஜ் ஜி. என்னை இது வரை யாரும் பெயர் சொல்லி கூப்பிடும் படி யாரும் சொல்லியது இல்லை. அதான் ஆச்சர்யமாக இருக்கு. நானும் நல்லாக தான் படித்தேன். பத்தாவதில் பள்ளியில் முதலாவதா வந்தேன். வீட்டில் எட்டு பேரு. மேற்கொண்டு படிக்க வசதி இல்லாதால் டிரைவர் வேலைக்கு செய்ய ஆரம்பித்துவிட்டேன். ஆச்சு, ஒரு பத்து வருஷம் இங்க வந்து!

கேட்கும் போது பரிதாபமாக இருந்தது. ஜாவித், உனக்கு மேற்கொண்டு படிக்கும் வாய்ப்பு கிடைக்காதால் நீ டிரைவர் வேலை பார்க்க வேண்டியதா போய்விட்டது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் இந்த வேலையில் இருக்கிறேன். அவ்வளவு தான். நீ எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை. கடவுள் உனக்கு நிச்சயம் வேறு வகையில் உதவுவார் என்று சமாதானம் செய்தேன்.

(ஜாவிதை நான் முதல் முதலில் சந்தித்த போது என்னிடம் நன்றாக ஆங்கிலத்தில் பேசினான். எனக்கு பிரமிப்பாக இருந்தது. பின்னர் நான் இந்தியன் என்று தெரிந்ததும் ஹிந்தி (அவனுக்கு உருது) பேச ஆரம்பித்தான். நிச்சயம் அவன் படிக்கற வாய்ப்பு இல்லாததால் இந்த வேலை செய்கிறான் என்று நான் நினைத்தேன். அது சரியாக இருந்தது)

அலுவலகத்தில் ஒரு வேலையும் இல்லை. Iquama இல்லாமல் ஒன்னும் நடக்காது என்று சொல்லி விட்டார்கள். பொழுது போக வேண்டும் என்பதற்காக credit policy manual எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தேன். 2002 ஆம் ஆண்டு சிட்டி வங்கியின் ஒரு பகுதியாக (இந்த வங்கி) இருந்த போது எழுதப்பட்டது. அதன் பிறகு சில circulars மட்டுமே.

மாலை 5 . 30 . அநேகமாக எல்லோரும் போய்விட்டு இருந்தார்கள். வீட்டுக்கு போவதில் ரொம்ப நேரக்கட்டுப்பாடோட இருக்காங்க. யாரும் இல்லாதாதால், நானும் ஹோட்டல் நோக்கி கிளம்பினேன்.

நேற்று இரவு நேரம் செக் இன் செய்ததால் சில விஷயங்களை சரியே கவனிக்க வில்லை. அயர்ச்சி வேறு. இப்பொழுது சிறிது நோட்டம் விட ஆரம்பித்தேன். ஹோட்டல் நுழைவு கேட்டில் பலத்த பாதுகாப்பு இருந்தது. நான்கைந்து பாதுகாவலர்கள் அதிநவீன ஆயுதங்கள், வாக்கி டாக்கி சகிதம் எல்லா வண்டியையும் சோதனை போட்டு அனுமதித்துக் கொண்டு இருந்தார்கள்.

ஹோட்டல் புல்வெளியில் ஒரு நடை போனேன். மொத்தம் நாலு கேட் இருந்தது. எல்லா கேட்டிலும் அதே போல பாதுகாப்பு. கிட்டதிட்ட இருபது பேர். யோசித்த படியே லாபி நோக்கி நடந்தேன்.

லாபிக்குள்ளே போவதற்கு ஒரு circular கதவு இருக்கும். அது சுற்றிக்கொண்டே இருக்கும். அந்த கதவுக்கு வெளியே ஒரு பத்து மீட்டர் தள்ளி ஒரு கூடாரம் போல இருந்தது. காற்று போக சில ஓட்டைகள். என்னவாக இருக்கும் என்று ஒரு ஆசை. காசா, பணமா, போயி பாக்கலாமே என்று போனால்....

கிர்ர்ர்ர் அடித்து விட்டது.

அந்த கூடாரத்துக்குள் ஒரு 4 x 4 ஜீப். ஒருவர் ஓட்டுவதற்கு தயாராக. இன்னொருவர் இயந்திர துப்பாக்கியை இயக்க தயாராக. இந்த ஜீப் சரியா ஹோட்டல்லின் நுழைவு வாயிலை நோக்கி நிறுத்தப்பட்டு இருந்தது. யாரவது தாக்குதல் நடுத்தும் நோக்கில், உள்ளே வந்தால், முன்னேறா விடாமல் தடுப்பதற்கு!

இதுக்கு மேல இங்க தங்க நான் என்ன ??????.

முதலில் ஜாவேதுக்கு போன் செய்தேன். ஜாவேத், எனக்கு ஹோட்டல் காலி பண்ணிட்டு, ஒரு அபார்ட்மென்ட் பாக்கணும், ஏற்பாடு பண்ணு. நாளை காலையே போயி தேடலாம்.

"எதாவது பிரச்சினையா யுவராஜ் ஜி? " இது ஜாவித். அதெல்லாம் ஒன்னும் இல்லை. நாளைக்கு காலைல பேசலாம் நு செல்பேசியை அணைத்தேன்.

Tuesday, June 15, 2010

இப்படியும் காலன் வருவானா?





இரண்டு நாட்களுக்கு முன் சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடந்த துயர சம்பவம்.

பிதா ஹரிஸ் (FIDA HARRIS) ஐந்து வயது நிரம்பிய அழகான குழந்தை. கடந்த இரண்டு மாதமாக தான் பள்ளிக்கு சென்று வந்து இருந்தாள். விதி எந்த ரூபத்தில் காலனை வரவைப்பான் என்று தெரியாமல் ஜூன் 13ம் தேதி பள்ளிக்கு கிளம்பினாள். ஆனால் திரும்பவில்லை. ஏன் தெரியுமா? பள்ளிக்கு சென்ற பிதா, தான் சென்ற வேனிலே தூங்கிவிட, அறிவு கெட்ட டிரைவர் அதை பார்க்காமல் வண்டியை பூட்டி விட்டு போய் விட்டான். பொதுவாக இந்த வேன்கள் ஆள் அரவமற்ற பிரேதேசத்தில் தான் நிறுதப்ப்படுமாம். இங்கு வெய்யில் 50 டிகிரி தாண்டுவது சரவ சாதாரணம். அலட்சியத்தின் விளைவு, மூச்சு விட முடியாமல், உதவிக்கு யாரும் இல்லாமல், வெப்பத்தில் அவதிப்பட்டு, ஒரு குழந்தையின் மரணம்.

விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்.

http://arabnews.com/saudiarabia/article65581.ece

அந்த குழந்தையின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். அக்குழந்தையை பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கும், உற்றோருக்கும் கடவுள் மன தைரியத்தை தந்து துணை இருப்பாராக.

சோதனை மேல் சோதனை...

மீண்டும் சவுதி கதை கேக்கலாமா........

ஜோதிஜி என்னனு நீங்க கேளுங்களேன்? செந்தில் அண்ணே நீங்களாவது கேளுங்களேன்? அஷீதா அட்லீஸ்ட் நீங்க? விஜய் அண்ணா, ராகவன் அண்ணா, நீங்க யாரும் கேக்காட்டி நான் சொல்லாம விட்டுடவுனா என்ன............

28 / 11  / 2008 அன்று கோவைக்கு பை பை சொல்லி, air arabia புடிச்சு ஷர்ஜாஹ் கிளம்பியாச்சு.  சவுதியில் ஜல்லி அடிக்கும் வாய்ப்பு எதுவும் இல்லாததால், கடைசியா ஒரு முறை ஷார்ஜாவில் 'தாக ஷாந்தி' முடித்துவிட்டு  ( பீராய நமக, பேக் பைப்பராய   நமக) தம்மாம் வந்து எறங்கினேன்.

8 . 3 0 க்கு குடியுரிமை சோதனைக்கு நின்று மூணு மணிநேரம் (தெனற தெனற ....ஆவ்வ்வ்வ்) கழித்து வெளி வந்தேன். இது போல் ஒரு மட்டமான அனுபவம்  இருந்தது இல்லை. வந்து இறங்கியதே ஒரே ஒரு விமானம். மொத்தம் சுமார் 150 பேர். இருந்ததோ பத்து கவுண்டர். அதில் ஒருவரும் இல்லை. முதலில் பெண்கள் அனைவரையும் ஒரு வரிசையில் நிற்க வைத்தார்கள். (மவனே, நம்மள மூணு மணி நேரம்  'டர்' ஆகிட்டு, இனி என்ன 'இர்ர்'...) நிக்க வேச்சாணுக. ஆண்கள ரெண்டு வரிசையா நிக்க வேச்சாணுக. அரபி டிரஸ் போட்டவன் எல்லாம் அஞ்சு நிமிஷத்துல போயிட்டான். மீதி இருந்தவன் எல்லாம் EXPAT  தான். ஒரு கப்பி தலையன் வந்து ஒவ்வொரு பாஸ்போர்ட்டா பார்த்தான். ஒரு சிலரை மட்டும் தனி வரிசையில் நிக்க வெச்சான். இடையிலே சூட் போட்டு இருந்த ஒரு வெள்ளைக்கார மவராசன கூப்பிட்டு அனுப்பினான். இப்படி வரிசை மாறி பந்தாடி ஒரு வழியா வெளிய வந்தேன்.  அட்லீஸ்ட் FULL FORMALSல வந்து இருந்தா ஒருவேளை மதிச்சி இருப்பானோ என்னவோ. பக்கி மாதிரி பழைய ஜீன்சும் பரட்டை தலையும் பாத்து லேபர்னு நெனச்சு இருப்பான்.

நமக்கு எப்போ 7 . 50  F . M . (அதாங்க ஏழரை) தனியா வந்து டியூன் போட்டு இருக்கு?   வழக்கம்  போல  நாலாந்து  வாத்தியக்கரங்களை  கூட்டிகிட்டு வந்து... அப்பப்ப.....போதும்டா சாமீ.

நல்ல வேலை, நம்ம டிரைவர் அண்ணன் ஒன்னும் சொதப்பலை. கரெக்ட்டா  சும்மா கன் மாதிரி வந்து விட்டு இருந்தார். அவட வந்தது நம்ம கேரளத்து  சேட்டன் அல்லோ...ஒரு கொழப்பமும் இல்லா.

30 நாட்களுக்கு மங்களம் பாட ஹோட்டல் லீ மெரிடியன்ல ரூம் போட்டு இருந்தார்கள். நன்றாக தூங்கிவிட்டு, மறுநாள் எழுந்து உற்சாகமாய் கிளம்பினேன். முதல் அனுபவம், அதுவும் சவுதி போன்ற ஒரு நாட்டுல....நிறைய கேள்விகள், மனதுக்குள்....

01 .12 .2008 .
எங்களோட DIVISION HEAD  (DH)  விடுமுறையில் இருந்ததால் ACTING DH அவர்களை சந்தித்து பணியில் சேர்ந்தேன். எங்களுடைய உரையாடல் INDIAN BANKING SYSTEM  பற்றி நன்றாக போய்க்கொண்டு இருந்தது கொஞ்ச நேரத்துல:
"RAJ, WHEN DID U ARIVE FROM INDIA EXACTLY, WAS IT YESTERDAY'? என்று கேட்டார்.

இதுல என்னடா வில்லங்கம், ஒரு வேலை அஷ்டமி, நவமி பாக்குராரோ என்று யோசினை செய்து கொண்டே "YES SIR' என்றேன்.

" IN THIS CASE, YOU HAVE JUST ARRIVED WITH AN ENTRY VISA. SORRY RAJ, BAD LUCK TO YOU"

வந்த வேகதுலையே ரிவிட்டா? ஐயோ......ஆப்பு எனக்கு வெச்சாங்களா, இல்ல நானே ஆப்ப தேடி போயி அது மேல ஜம்முனு உட்க்காந்துகிட்டனா.......தெரியலையே....

என்னனு சொல்லவா.....

இப்போ வரேன் ....நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்.......