Friday, February 5, 2010

நான் சவுதி வந்த (சோக) கதை - பகுதி - II

காலை 11 மணிக்கு விமானம். நான் 7 மணிக்கே வந்து விட்டேன். 8மணிக்கு CHECK IN ஆரம்பித்தது. கவுன்டரில் இருந்த வடக்கத்தி மங்கை என்னோட கடவுச்சீட்டு (passport), மற்றும் பயண சீட்டு ஆகியவற்றை சரி பார்த்து BOARDING CARD குடுத்தாள். ஒரு வினாடி தான் இருக்கும். "EXCUSE SIR, COULD BE PLEASE GIVE IT BACK FOR A MOMENT SIR?" என்றாள்
இது என்னடா புது தலைவலி என்று யோசித்தேன். நான் திருப்பி குடுத்த போர்டிங் கார்டை அவள் கிழிக்க, எனக்கோ டரியல் ஆனது. ஒரு வேலை FLIGHT FULL என்று குண்டு போடுவாளோ? சில நிமிடம் கழித்து இன்னொரு போர்டிங் கார்டை குடுத்தாள். "SORRY FOR THE INCOVENIENCE SIR. YOUR TICKET HAS BEEN UPGRADED TO COMPLIMENTARY BUSINESS CLASS. WISH YOU A PLEASANT FLIGHT" என்று ஒரு இன்ப அதிர்ச்சி குடுத்தாள்.
மச்சம்டா மாப்ளேய்!!!!. பிசினஸ் கிளாஸ்ல பார்லி டீ சாப்பிட்டு கிட்டே போலாம்னு மனம் குஷி ஆனது.
இம்மிக்ரேஷேன் போனதும் வழக்கம் போல ஏழரை ஆரம்பித்தது. காரணம், என்னோட கடவுச்சீட்டு கோவாவில் நான் வேலை செய்த போது எடுத்தது. PLACE OF ISSUE: PANAJI என்று இருக்கும். என்னை பெத்தவங்க வேற சேட்டு பையன் மாதிரி பேரு வெக்க, நானும் கொஞ்சம் செவப்பா இருந்து தொலைக்க, குடியுரிமை அதிகாரிக்கு நம்ம பாஸ்போர்ட் பாத்தாலே கொஞ்சம் சந்தேகம் தான், "கோவாகாரன்" எதுக்கு சென்னை வந்து international flight பிடிக்கறேன்னு. . இது ஒன்னும் நமக்கு இது புதுசு இல்லையே பாஸ்? எவ்ளவோ பாத்துட்டோம், இது பாக்க மாட்டமா. அங்கே சில நிமிட வாசிப்புகள் / விசாரிப்புகளுக்கு பிறகு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தபட்டேன். என்னோட ஒடிசலான உருவத்தை பார்த்த அதிகாரி, சும்மா ஒப்புக்கு சப்பான் மாதிரி சோதனை போட்டார்.. நாம ஒரு டம்மி பீஸ்நு எப்படியாவது கண்டுபிடிசுடுறாங்க. .
ஒருவழியாக நாலு மணி நேரம் கழித்து துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கினதும் மாம்ஸ் தயாராக வந்து இருந்தார். நேராக ஷார்ஜாவில் உள்ள அவர் வீட்டுக்கு போயி ஓய்வு எடுத்துவிட்டு மாலை கும்மி அடிக்க கெளம்பினோம். வழக்கம் போல அஜ்மானில் உள்ள HOLIDAY BEACH கிளப்பில் ROUND TABLE CONFERENCE நடத்தினோம். மூன்று சுற்று முடித்ததும், மாம்ஸ் ஒரு பார்வை பார்த்தார். " மாப்ளை நாளைக்கு நீ இன்டர்வியுக்கு வந்து இருக்க" என்பது போல ஒரு பார்வை.
மறுநாள் காலை 9 மணிக்கு நேர்முக தேர்வு. நள்ளிரவில் தூங்க போனேன். காலை சீக்கிரம் எழுந்து 8 மணிக்கெல்லாம் GRAND HAYATT HOTEL அடைந்தேன். பிசினஸ் சென்டரை தேடி பிடித்து போன போது ...........

CONT IN PART III

3 comments:

ரோகிணிசிவா said...

கலக்குறீங்க!இயல்பான நடையல உங்க எழுத்து சூப்பர் அப்பு !

YUVARAJ S said...

Thank you Rohini. Keep blogging.

ரோகிணிசிவா said...

katai elutha sonna , comment ku comment elutharar !