Tuesday, July 6, 2010

இவர் உங்கள் உதவியை எதிர்பார்க்கிறார்!

டாக்டர் கனவு கைகூடியும், பணமில்லாததால் இடைப்பாடி மாணவர் ஒருவர் செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார்.



சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே மல்லிபாளையத்தை சேர்ந்தவர் சித்தையன்(47). அவரது மனைவி மாரியம்மாள் (45). போடிநாய்க்கன்பட்டி செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர். அவர்களது மூன்றாவது மகன் கோவிந்தராஜ், கடந்த கல்வி ஆண்டில் இடைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.பொதுத்தேர்வில் தமிழ்- 182, ஆங்கிலம்- 132, கணிதம்- 177, இயற்பியல்- 197, வேதியியல்- 200, உயிரியல்- 191 என 1,079 மதிப்பெண் பெற்றார். கட் - ஆப் மார்க் 194.75 பெற்றதால், மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளார்.

கடந்த 1ம் தேதி நடந்த மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்றார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. வரும் 21ம் தேதி கல்லூரியில் சேர வேண்டும். ஆனால், வசதியில்லாததால் சீட் கிடைத்தும் படிக்க முடியாத நிலையில் கோவிந்தராஜ் உள்ளார்.

இது குறித்து மாணவர் கோவிந்தராஜின் டியூஷன் ஆசிரியர் பிரகாஷ் கூறியதாவது: மாணவர் கோவிந்தராஜ் மிகவும் ஏழை. பொதுத்தேர்வில் மருத்துவ படிப்புக்கு கட்-ஆப் 194.75 எடுத்துள்ளார். மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளார். செங்கல் சூளையில் வேலை செய்து 7,000 ரூபாய் சேமித்து வைத்துள்ளார். அவரது படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

( படிக்க வசதி இல்லாத இந்த மாணவருக்கு உதவ தினமலர் வாசகர்கள் பலர் முன் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

எஸ்.கோவிந்தராஜ், த/பெ. சி்த்தையன், 4/149, மல்லிபாளையம், போடிநாயக்கன்பட்டி அஞ்சல், இடைப்பாடி தாலுகா- 637 105; மொபைல்: 96882 26467

வங்கியின் அக்கவுண்ட் எண் : 31245117385
வங்கியின் பெயர்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இடைப்பாடி கிளை
IFSC  CODE : SBIN 0002213

நன்றி: தினமலர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=32243

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

ok will do for him.

thanks for sharing

YUVARAJ S said...

Thank you Ramji. Try to forward to your friends and seek their help. God bless you.

YUVARAJ S said...

ANONYMOUS,

FIRST, YOU DONT HAVE ANY GUTS TO SHOW YOUR IDENTITY.

SECOND, YOU ARE TEASING PEOPLE WHO TRY TO HELP OTHERS BY PUTTING RIDICULOUS COMMENTS. THIS SHOWS YOUR RESPONSIBILITY TOWARDS THE SOCIETY.

DO YOU HAVE ANY COMMON SENSE?

I AM HELPING THIS GUY BY ALL MEANS AND I DONT WANT TO PROVE THIS TO A SELFISH COWARD LIKE YOU.

THERE ARE SOME NEW FILMS RELEASING. START WRITING REVIEWS AND GET VOTES IN TAMLISH & TAMIL MANAM.