என்னுடைய அனுபவங்கள், ரசித்த நகைச்சுவை சம்பவங்கள், அறிந்த செய்திகள், சமூக கோபம் ஆகிய வற்றின் மொத்த கலவை இது....
Friday, August 27, 2010
சுங்க சோதனை! ஒரு மலேசிய அனுபவம்....
சவுதியில் என்னோட வங்கியில் பணிபுரிந்த ஒரு நண்பருக்கு (அவன் ஒரு சவுதி) மலேசியாவில் ஒரு சின்ன வியாபார தொடர்பு இருந்தது. அது பற்றி மேற்கொண்டு விபரங்கள் சேகரிக்க அவனால் போக இயலவில்லை. எனவே, என்னை போக இயலுமா என்று கேட்டுக்கொண்டான்.
விஷயம் இது தான். அவன் புதிதாக ஒரு VALVE REPAIR UNIT துவங்க எண்ணி உள்ளான். இதற்கு வேண்டிய தொழில்நுட்பத்தை ஒரு மலேசியா நிறுவனம் தர முன்வந்தது. அந்த நிறுவனத்துக்கு அதற்க்கான கட்டமைப்பு இருகிறதா என்று பார்த்து வர வேண்டும். அந்த நிறுவனம் ஒரு சீனனுக்கு சொந்தமானது. மார்ச் மாதம் ஜுபைல் நகரத்தில் நடந்த ஒரு கண்காட்சியில் என்னோட நண்பனுக்கு இவர்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அவர்கள் கேட்ட தொகை ( TECHNICAL FEES ) ரொம்பவே அதிகமாக இருந்தது. எனினும், நண்பனுக்கு வியாபாரத்தை விட்டு விட மனம் இல்லை. எனவே, ஒருமுறை, அவர்களின் தொழிற்கூடத்தை பார்வை இட்டு பின்பு பேரம் பேசலாம் என்று எண்ணினான்.
பஹ்ரைனிலிருந்து ஏப்ரல் 28 ஆம் தேடி கோலாலம்பூர் செல்ல வேண்டி இருந்தது. நான் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு செல்வது வழக்கம். இந்த முறை மூக்கை தொட்டு, மலேசியா வழியாக!. நம்ம பசங்க கண்டிப்பா BLUE LABEL என்ற அறிய பொக்கிஷத்தை நிச்சயம் வாங்கி வரவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டனர். சரக்கு பஹ்ரைன் DUTY FREE ஷாப்பில் கிடைக்கவில்லை. பயணம் செய்த விமானத்தில் இருந்தது. எனவே வாங்கி என்னோட கைபையில் வைத்து கொண்டேன். பொதுவாக, விமான பயணத்தில் (தனியாக போகும் பொழுது) கைபொதி மட்டும் வைத்து கொள்வது வழக்கம். அதற்கு காரணம், ஒரு முறை பட்ட சூடு!!!!. வேறு ஒரு சந்தர்பத்தில் அதை பற்றி எழுதுகிறேன்.
விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ( KLIA ) தரை இறங்கியது. சவுதி குடிஉரிமை அட்டை வைத்து இருந்ததால் எனக்கு 120 மணிநேர ட்ரான்சிட் விசா கிடைத்தது. திரும்பும் போது பெரிய பல்பு வாங்குவேன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
ஹோட்டல் ரூம் ஏற்கனவே புக் செய்தாகிவிட்டது. எனக்கு வண்டி ஓட்டுவது கொள்ளை இஷ்டம். எனவே, ஒரு RENT -A -CAR முன்பதிவு செய்து இருந்தேன். இறங்கியவுடம் வண்டி தயாராக இருந்தது. மலேசியாவை பொறுத்த வரை எனக்கு முதல் அனுபவம். காரில் GPS பொருத்த சொல்லி இருந்தேன். செய்து இருந்ததால் வண்டி ஓட்ட மிக சுலபமாக இருந்தது.
சென்ற வேலை, ஒரே நாளில் முடிந்தது. இறங்கிய அன்றே ஜோஹோர் பஹ்ரு சென்று அவர்களின் தொழிற்கூடத்தை பார்வை இட்டு சில படங்களையும் எடுத்துக்கொண்டேன். நண்பனிடமும் பேசினேன்.
மறுநாள், நன்றாக ஊர் சுற்றி விட்டு, மூன்றாவது நாள் காலை KLIA நோக்கி, காரை செலுத்தினேன். அறையை காலி செய்யும் போது ஒரு பத்து மணி இருக்கும். இரண்டு மணிக்கு தான் விமானம். விமான நிலையம் செல்ல ஒரு 40 நிமிடம் மட்டுமே. எனவே, போதுமான அவகாசம் இருந்தது. KLIA சென்றவுடன், காரை திருப்பி குடுத்து பில் செட்டில் செய்தேன். போர்டிங் பாஸ் போடுவதற்கு கவுன்ட்டர் தேடினேன். எங்கேயும் காணவில்லை. ?????
மணி இப்போ 11 . 30 ஆகி இருந்தது. எனக்குள் லேசான பதட்டம். விமான நிலையத்தின் ஒரு மூலையில் AIR ASIA போர்ட் தென்பட்டது. ஆவலாக ஓடி போயி போர்டிங் பாஸ் கேட்டேன்.
அந்த பெண்மணி, என்னை நக்கலாக ஒரு சிரிப்பை உதிர்த்தாள், ஊருக்கு புதுசா என்பதை போல!!!. வரும்போது எந்த விமானத்தில் வந்தாய் என்று கேட்டாள். நான் GULF AIR என்றேன். அதனால் தான் நீ KLIA வந்து இறங்கினாய். AIR ASIA விமானம் இங்கே வராது. அதற்க்கு LCCT டர்மினல் போக வேண்டும் என்றாள். வேறு டர்மினல் என்றவுடன் அக்கம் பக்கம் எங்காவது இருக்கும் என்று நினைத்தேன், நம்ம ஊரை போல. என் எண்ணத்தில் ஒரு இடி இறக்கினாள். LCCT இங்கிருந்து கிட்டதிட்ட 40 கீ.மி தாண்டி SEPANG அருகில் உள்ளது. கீழே போனால் பேருந்து கிடைக்கும், ஓடு என்று சிரித்தாள்.
வேறு வழி?? நானும் ஓடினேன். பேருந்து ஏறும்போது மணி 12 .10 . டிரைவரோ என்னோட அவசரம் புரியாமல் நிதானமாக செலுத்தினார். ஒரு மணிக்கு பேருந்து சென்று அடைந்தது. அடித்து பிடித்து போர்டிங் கார்டு வாங்கினேன். கொஞ்சம் ஷாப்பிங் செய்ததால் ஏழு கிலோவாக இருந்த கைபொதி பத்து கிலோ ஆகிவிட்டு இருந்தது. என்னிடம் வேறு பொதி இல்லாததால், அதை கைபொதியாக கொண்டு செல்ல அனுமதிக்கபட்டேன். மணி 1 .15 . கையில் போர்டிங் கார்ட் இருந்ததால் தைரியமாக இருந்தது.
இம்மிகிரேஷன் கூட்டமாக இருந்தது. எனவே, அதன் மேலதிகாரியை சந்தித்து நிலைமையை விளக்கினேன். அவரே உதவினார். இனிமே ஒரு சிரமமும் இல்லை என்று சீட்டி அடித்தபடி சுங்க சோதனை அடைந்தேன்.
என்னோட கைபொதி ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்கேன் பார்த்து கொண்டு இருந்தவன் மலாய் மொழியில் ஏதோ கத்த, என்னோட கைபொதி மட்டும் தனியே அப்புறபடுத்தப்பட்டது. முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. சில வினாடிகளில் நன்றாக உறைத்தது. எல்லாம் நான் வாங்கின ப்ளூ லேபிளின் திருவிளையாடல் தான். சரக்கை அனுமதிக்க மறுத்து விட்டான். இதில் சிரிப்பு என்னவென்றால், சுங்க சோதனை முடித்த உடனே, சரக்கு கடை உண்டு. அங்கே வாங்கினால், கூட கொண்டு செல்லலாம். அனால் வெளி சரக்குக்கு அனுமதி இல்லை.
200 டாலர் மதிப்புள்ள சரக்கை அங்கேயே விட்டு செல்ல மனம் இல்லை. எனக்கு எதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். உனக்கு 5 நிமிடம் தருகிறேன். ஓடிபோயி உன்னோட கைபொதியை செக்-இன் செய்து விட்டு வா. இதற்க்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது என்றான். நான் ஏற்றுக்கொண்டேன். கூடவே இம்மிக்ராஷன் வரை வந்தான். என்னோட பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டது. நான் ஓடிபோயி செக்-இன் கவுண்டரை அடைந்தேன். அவனும் முனகிக்கொண்டே செய்ய ஒத்துகொண்டான். இதற்குள் என் பெயரை ஒலிபெருக்கியில் கூவினார்கள். சொல்லுறது என் பேருதான், பொதி வந்துடுமா என்று கேட்டேன். அதெல்லாம், வரும் என்று தெனாவட்டாக ஒரு பதில் வந்தது.
மீண்டும் இம்மிக்ராஷன் வந்து, பாஸ்போர்டை பெற்றுக்கொண்டு, சுங்க சோதனையை முடித்து, போர்டிங் கேட் நோக்கி ஓடினேன். இதற்குள் இரண்டாவது முறையாக என்னோட பெயர் ஏலம் விடபட்டது. அடித்து பிடித்து விமானாம் ஏறி அமர்த்தும், ஒரு பெரிய தவறு செய்தது தெரிந்தது.
பதட்டத்தில் நான் என்னோட பையை பூட்டவே இல்லை. சரக்கையும் அவசரத்தில் மேலேயே வைத்து இருந்தேன். பட்ட கஷ்டம் எல்லாம் பாழாகி விடுமோ என்று ஒரு பதபதைப்பு. திருச்சி இறங்கியதும் என்னோட பை தான் கடைசியாக வந்தது. எனக்கு சுத்தமாக நம்பிக்கையே இல்லை. உலக அதிசயமாக, எல்லா பொருளும் பரம பத்திரம், ப்ளூ லேபில் உட்பட.
நீதி: ட்ரான்சிட் பயணத்தில் சரக்கு கையில் கொண்டு போக கூடாது.
Wednesday, July 7, 2010
உலக கோப்பை கால்பந்து 2010 ! ஜெயிக்க போவது யாரு?
1. Brazil won the World Cup in 1994; before that they also won in
1970.Adding1970 + 1994= 3964
2. Argentina won its last World Cup in 1986; before that they also won
in 1978. Adding 1978 + 1986= 3964
3. Germany won its last World Cup in 1990; before that they also won
in 1974. Adding 1974 + 1990= 3964
4. Brazil also won the World Cup in 2002; before that they also won in
1962. Adding 1962+ 2002= 3964
5. Therefore if you want to know what nation is going to win the World
Cup in 2010, you only have to subtract 2010 from the magic number that
we have determined: 3964....
3964 minus 2010 = 1954... .................
.
.
.
.
.
.
.
.
.
.
.
In 1954 the World Cup was won by Germany !
Lets wait and see, if this works out!
(Firdaus சித்தப்பு அடிச்சிவிட்ட forward மெயிலோட நகல் தான் மேலே)
Tuesday, July 6, 2010
இவர் உங்கள் உதவியை எதிர்பார்க்கிறார்!
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே மல்லிபாளையத்தை சேர்ந்தவர் சித்தையன்(47). அவரது மனைவி மாரியம்மாள் (45). போடிநாய்க்கன்பட்டி செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர். அவர்களது மூன்றாவது மகன் கோவிந்தராஜ், கடந்த கல்வி ஆண்டில் இடைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.பொதுத்தேர்வில் தமிழ்- 182, ஆங்கிலம்- 132, கணிதம்- 177, இயற்பியல்- 197, வேதியியல்- 200, உயிரியல்- 191 என 1,079 மதிப்பெண் பெற்றார். கட் - ஆப் மார்க் 194.75 பெற்றதால், மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளார்.
கடந்த 1ம் தேதி நடந்த மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்றார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. வரும் 21ம் தேதி கல்லூரியில் சேர வேண்டும். ஆனால், வசதியில்லாததால் சீட் கிடைத்தும் படிக்க முடியாத நிலையில் கோவிந்தராஜ் உள்ளார்.
இது குறித்து மாணவர் கோவிந்தராஜின் டியூஷன் ஆசிரியர் பிரகாஷ் கூறியதாவது: மாணவர் கோவிந்தராஜ் மிகவும் ஏழை. பொதுத்தேர்வில் மருத்துவ படிப்புக்கு கட்-ஆப் 194.75 எடுத்துள்ளார். மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளார். செங்கல் சூளையில் வேலை செய்து 7,000 ரூபாய் சேமித்து வைத்துள்ளார். அவரது படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
( படிக்க வசதி இல்லாத இந்த மாணவருக்கு உதவ தினமலர் வாசகர்கள் பலர் முன் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
எஸ்.கோவிந்தராஜ், த/பெ. சி்த்தையன், 4/149, மல்லிபாளையம், போடிநாயக்கன்பட்டி அஞ்சல், இடைப்பாடி தாலுகா- 637 105; மொபைல்: 96882 26467
வங்கியின் அக்கவுண்ட் எண் : 31245117385
வங்கியின் பெயர்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இடைப்பாடி கிளை
IFSC CODE : SBIN 0002213
நன்றி: தினமலர்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=32243
Tuesday, June 29, 2010
ராவணன் விமர்சனம் - ஒரு புதிய கோணம்!
எல்லோரும் பதிவுல போட்டி போட்டுகிட்டு பிரிச்சு மேயறாங்க.
இதில் நான் இயக்குனர் தகரம் முனிரத்னம் அவர்களை குற்றம் சொல்ல மாட்டேன். ஏன்னா, அவர் ரொம்ப நல்லவர், உண்மை பேசுபவர். சத்தியவான்.
எப்படின்னு கேளுங்க சொல்லுறேன்.
ஆங்கிலத்தில் PORTMANTEAU வகை சொற்கள் உண்டு. PORTMANTEAU என்றால் இரண்டு வார்த்தைகள் கலந்து ஒரு புதிய வார்த்தையை உருவாக்கும். எடுத்துக்காட்டாக, MOTEL என்பது நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தை / தங்கும் விடுதியை குறிக்கும் ஒரு சொல். அது MOTORWAY + HOTEL ஆகிய இரண்டு சொற்கள் இணைந்த ஒரு PORTMANTEAU .
இது போல, ராவணன் என்பது ஒரு தமிழ் PORTMANTEAU . (எங்க சுத்தி எங்க வரோம் பாத்தீங்க இல்ல)
ராவணன் - அதாவது, இந்த சொல்லை நன்றாக பிரித்து பார்த்தால் ராவ + வந்தவன் என்றே பொருள் வருகிறது. நம்மை எல்லாம் உயிரோடு ராவுவதற்க்கே (அறுப்பதற்கே) இயக்குனர் தகரத்தால் எடுக்கப்பட்ட படம்.
தான் படம் எடுத்ததன் நோக்கத்த சாமர்த்தியமா டைடிலுகுல்லையே ஒளிச்சு வெச்சு சொல்லி இருக்கிறார்.
மடப்பசங்க எல்லோரும் (நானும் சேத்தி தான்) டைடில சரியாய் புரிஞ்சிக்காம, வரிஞ்சி கட்டி வரிசைல நின்னு, ராமாயணம் ரீமேக்கு, இயக்குனர் தகரம் எடுத்து இருக்காரு போயி பாத்துட்டு, மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி திரியரிங்க.
எல்லோரும் அவர விடுங்க பா.......ஏன்னா அவர் ரொம்ப நல்லவர்.....டைட்டில்ல உண்மைய தான் சொல்லி இருக்காரு.....
( படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே நானும் நண்பர்களும் கார் எடுத்துகிட்டு ஒரு மணி நேரம் ஒட்டி, ரெண்டு மணிநேரம் இம்மிக்ரேஷன் வரிசியைல நின்னு பஹ்ரைன் போயி (நாடு விட்டு நாடு!!!) முதல் ஷோ பாத்தோம்........ )
சேம் ப்ளட் யா. ஸோ, கூல் டௌன் கூல் டௌன்!!!!
Wednesday, June 23, 2010
மயில் கோழியான கதை!!!
சாப்பிட்டு விட்டு பணம் குடுக்க போனபோது வழக்கம் போல நம்ம முபாரக் பாய் எவனடா வம்பு இழுக்கலாம் என்று கல்லாவில் காத்துக்கொண்டு இருந்தார்.
நண்பர் குமார் புதிதாக வந்ததால், அவரை பார்த்து," சார் புதுசா இருக்கீங்க, நமக்கு எந்த ஊரு" என்று கேட்டார்.
"முதல்ல உம்மோட ஊற சொல்லும் வோய்"
"நமக்கு மயிலாடுதுறை சார்"
வூடு கட்ட களம் அமைச்சு குடுத்தாச்சு. நாம சும்மா இருப்போமா??
" பாய், ஒரு சின்ன சந்தேகம், உங்க ஊருல நெறிய மயில் ஆடுமா? பேரு அமர்களமா மயில் ஆடும் துறைன்னு இருக்கே???"
" ஆமாங்க, எங்க ஊரு அவ்ளோ சிறப்பான ஊரு"
" பாய், ஆடுறது எல்லாம் ஆம்பளை மயிலா இல்ல பொம்பள மயிலா?"
(பெண் மயிலுக்கு தோகை இல்லை, ஆண் மயிலுக்கு தான் தோகை உண்டு. அவர் பெண் மயில் என்று சொல்லி வாயாக்குடுதால் மடக்கலாம் என்று பிளான்)
" எந்த மயில் ஆடுனா என்ன? அது ரெண்டு காலுல ஆடப்போவுது" என்று முபாரக் சமாளிக்க பார்க்க.....
விடுவோமா நாங்க!!!
" ஹலோ, பாய், தோகை விரிச்சு ஆடுன அதுக்கு பேரு மயில். இல்லாட்டி அது ஒரு வளந்த, பெரிய கோழி. ஸோ, இனிமே உங்க ஊரு பேரு கோழியாடும்துறை. யாரவது ஊரு பேரு கேட்டா, இப்படியே maintain பண்ணுங்க. வரட்டா.....என்று பில் செட்டில் பண்ணி நடையை கட்டினோம்.
பின்னால் பாயின் குரல் கேட்டது. " இவங்க வெறிய தீத்துக்க இன்னைக்கு நாம தான் சிக்கினோம் போல!!!!!!!"
நாங்கெல்லாம் தீப்பொறி திருமுகத்தையே ரத்த திருமுகம் ஆகுனவுங்க......
Saturday, June 19, 2010
இப்படி வந்து மாட்டிக்கிட்டேன்!
காரணம்? ஹஜ் விடுமுறை.!!!!
சத்திய சோதனை!
கடவுச்சீட்டை வாங்கிக்கொண்டு அரபி மொழியில் ஒரு லெட்டர் குடுத்தார்கள். இன்னார், இந்த வங்கியில் வேலை செய்கிறார். அவருடைய iqama (குடிஉரிமை அட்டை) நாங்கள் வழங்க ஏற்பாடு செய்வதால், அவரிடம் வேற எந்த அடையாள அட்டையும் இல்லை என்று எழுதி இருந்தது.
வங்கியில் குடுத்த கடிதத்தை எப்போதும் (ஒரிஜினல்) கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், எங்காவது போலீஸ் அல்லது முத்தவா (religious police ) கேட்டால் காட்ட வேண்டும் என்றும் சொன்னார்.
ரியாதில் சில நண்பர்கள் இருப்பதால், அங்கே போகலாம் என்று ஒரு திட்டம் போட்டேன். அதற்க்கும் வேட்டு வைத்து விட்டார்கள். இங்கே iquama இல்லாமல் எங்கும் செல்ல முடியாது. ஏன், பஸ் அல்லது ரயில் டிக்கெட் கூட வாங்க முடியாது!!! மேலும் ரியாத் போகும் வழியில் சில செக் பாயிண்ட் இருப்பதாவும், சில சமயம் போலீசார் அந்த கடிதத்தை (குறிப்பாக ஊரு விட்டு ஊரு போனா) மதிக்க மாட்டார்கள் என்று சொல்லி தடுத்து விட்டனர்.
பத்து நாள் இருக்கே, பேசாம ஊருக்கு போயி வரலாம் நு கேட்டேன். அய்யே....., நீ நெனக்குற மாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு போயிட்டு வர முடியாது. எங்க நாட்ட விட்டு வெளிய போகனும்னாலும் எக்ஸிட் விசா வேணும், iquama இல்லாம ஒன்னும் பண்ண முடியாது... BAD LUCK என்று சொல்லிவிட்டார்கள்.
நான் எந்த முடிவு எடுத்தாலும் அது iquama என்ற முட்டுச்சந்தில் வந்து நின்றது.
ஸோ, பத்து நாள் நான் complete ஹவுஸ் அர்ரெஸ்ட். எங்கும் போக முடியாது.
உலகத்துலேயே ஒரு நாட்ட விட்டு வெளியேற விசா கேக்குற ஒரு நாடு சவூதியா தான் இருக்கும்.
ஆபீஸ் கார் வேணும்னா பயன் படுத்திக்கோங்க, என்று சொல்லி டிரைவர வர வழைத்தார்கள். வந்தவர் பேரு ஜாவித், ஒரு பாகிஸ்தானி. எனினும், அவருக்கும் அஞ்சு நாள் ஹஜ் விடுமுறை இருப்பதாகவும், மற்ற நாட்களில் தேவைப்பட்டால் கூப்பிடுங்கள் என்று சொன்னார். முதலில் அவரை ஒரு நல்ல இந்திய உணவு விடுதிக்கு அழைத்து செல்ல சொன்னேன். மதினா உணவு விடுதியை அறிமுகம் செய்து வைத்தார். தஞ்சாவூர்கார்கள் நடத்துகிறார்கள், ஓரளவுக்கு பரவா இல்லை. இருவரும் உணவு அருந்தி கிளம்பினோம். பின்னர், வரும் வழியில் ஒரு சிம் கார்டு வாங்கினேன்.
நல்ல மனுஷன், முன் பின் தெரியாத என்னை நம்பி அவரோட iquama காபியை சிம் வாங்க குடுத்தார். நமக்கு தான் அந்த எழவெடுத்த iquama இல்லையே. பின்னர் ஆபீஸ் நோக்கி பேசிக்கொண்டே போக ஆரம்பித்தோம்.
ஸாப், நான் சாயங்காலம் உங்களை ரூம்ல டிராப் பண்ண வரவா என்று கேட்க, ஒன்னும் வேண்டாம் ஜாவித் பாய், நாலு பில்டிங் தாண்டி தானே ஹோட்டல் நான் நடந்து போய்கிறேன் என்று சொன்னேன்.
ஜாவித், இனிமே என்னை 'ஸாப்' என்று கூப்பிட வேண்டாம். நீயும் என்னோட வயதுக்காரன் தான். என்னை பெயர் சொல்லியே அழைக்கலாம் என்று சொன்னேன். என்னை புன்னைகைதபடி ஒரு பார்வை பார்த்தான். க்யா ஹுவா ரே என்றேன். ஒன்னும் இல்லை யுவராஜ் ஜி. என்னை இது வரை யாரும் பெயர் சொல்லி கூப்பிடும் படி யாரும் சொல்லியது இல்லை. அதான் ஆச்சர்யமாக இருக்கு. நானும் நல்லாக தான் படித்தேன். பத்தாவதில் பள்ளியில் முதலாவதா வந்தேன். வீட்டில் எட்டு பேரு. மேற்கொண்டு படிக்க வசதி இல்லாதால் டிரைவர் வேலைக்கு செய்ய ஆரம்பித்துவிட்டேன். ஆச்சு, ஒரு பத்து வருஷம் இங்க வந்து!
கேட்கும் போது பரிதாபமாக இருந்தது. ஜாவித், உனக்கு மேற்கொண்டு படிக்கும் வாய்ப்பு கிடைக்காதால் நீ டிரைவர் வேலை பார்க்க வேண்டியதா போய்விட்டது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் இந்த வேலையில் இருக்கிறேன். அவ்வளவு தான். நீ எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை. கடவுள் உனக்கு நிச்சயம் வேறு வகையில் உதவுவார் என்று சமாதானம் செய்தேன்.
(ஜாவிதை நான் முதல் முதலில் சந்தித்த போது என்னிடம் நன்றாக ஆங்கிலத்தில் பேசினான். எனக்கு பிரமிப்பாக இருந்தது. பின்னர் நான் இந்தியன் என்று தெரிந்ததும் ஹிந்தி (அவனுக்கு உருது) பேச ஆரம்பித்தான். நிச்சயம் அவன் படிக்கற வாய்ப்பு இல்லாததால் இந்த வேலை செய்கிறான் என்று நான் நினைத்தேன். அது சரியாக இருந்தது)
அலுவலகத்தில் ஒரு வேலையும் இல்லை. Iquama இல்லாமல் ஒன்னும் நடக்காது என்று சொல்லி விட்டார்கள். பொழுது போக வேண்டும் என்பதற்காக credit policy manual எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தேன். 2002 ஆம் ஆண்டு சிட்டி வங்கியின் ஒரு பகுதியாக (இந்த வங்கி) இருந்த போது எழுதப்பட்டது. அதன் பிறகு சில circulars மட்டுமே.
மாலை 5 . 30 . அநேகமாக எல்லோரும் போய்விட்டு இருந்தார்கள். வீட்டுக்கு போவதில் ரொம்ப நேரக்கட்டுப்பாடோட இருக்காங்க. யாரும் இல்லாதாதால், நானும் ஹோட்டல் நோக்கி கிளம்பினேன்.
நேற்று இரவு நேரம் செக் இன் செய்ததால் சில விஷயங்களை சரியே கவனிக்க வில்லை. அயர்ச்சி வேறு. இப்பொழுது சிறிது நோட்டம் விட ஆரம்பித்தேன். ஹோட்டல் நுழைவு கேட்டில் பலத்த பாதுகாப்பு இருந்தது. நான்கைந்து பாதுகாவலர்கள் அதிநவீன ஆயுதங்கள், வாக்கி டாக்கி சகிதம் எல்லா வண்டியையும் சோதனை போட்டு அனுமதித்துக் கொண்டு இருந்தார்கள்.
ஹோட்டல் புல்வெளியில் ஒரு நடை போனேன். மொத்தம் நாலு கேட் இருந்தது. எல்லா கேட்டிலும் அதே போல பாதுகாப்பு. கிட்டதிட்ட இருபது பேர். யோசித்த படியே லாபி நோக்கி நடந்தேன்.
லாபிக்குள்ளே போவதற்கு ஒரு circular கதவு இருக்கும். அது சுற்றிக்கொண்டே இருக்கும். அந்த கதவுக்கு வெளியே ஒரு பத்து மீட்டர் தள்ளி ஒரு கூடாரம் போல இருந்தது. காற்று போக சில ஓட்டைகள். என்னவாக இருக்கும் என்று ஒரு ஆசை. காசா, பணமா, போயி பாக்கலாமே என்று போனால்....
கிர்ர்ர்ர் அடித்து விட்டது.
அந்த கூடாரத்துக்குள் ஒரு 4 x 4 ஜீப். ஒருவர் ஓட்டுவதற்கு தயாராக. இன்னொருவர் இயந்திர துப்பாக்கியை இயக்க தயாராக. இந்த ஜீப் சரியா ஹோட்டல்லின் நுழைவு வாயிலை நோக்கி நிறுத்தப்பட்டு இருந்தது. யாரவது தாக்குதல் நடுத்தும் நோக்கில், உள்ளே வந்தால், முன்னேறா விடாமல் தடுப்பதற்கு!
இதுக்கு மேல இங்க தங்க நான் என்ன ??????.
முதலில் ஜாவேதுக்கு போன் செய்தேன். ஜாவேத், எனக்கு ஹோட்டல் காலி பண்ணிட்டு, ஒரு அபார்ட்மென்ட் பாக்கணும், ஏற்பாடு பண்ணு. நாளை காலையே போயி தேடலாம்.
"எதாவது பிரச்சினையா யுவராஜ் ஜி? " இது ஜாவித். அதெல்லாம் ஒன்னும் இல்லை. நாளைக்கு காலைல பேசலாம் நு செல்பேசியை அணைத்தேன்.
Tuesday, June 15, 2010
இப்படியும் காலன் வருவானா?

இரண்டு நாட்களுக்கு முன் சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடந்த துயர சம்பவம்.
பிதா ஹரிஸ் (FIDA HARRIS) ஐந்து வயது நிரம்பிய அழகான குழந்தை. கடந்த இரண்டு மாதமாக தான் பள்ளிக்கு சென்று வந்து இருந்தாள். விதி எந்த ரூபத்தில் காலனை வரவைப்பான் என்று தெரியாமல் ஜூன் 13ம் தேதி பள்ளிக்கு கிளம்பினாள். ஆனால் திரும்பவில்லை. ஏன் தெரியுமா? பள்ளிக்கு சென்ற பிதா, தான் சென்ற வேனிலே தூங்கிவிட, அறிவு கெட்ட டிரைவர் அதை பார்க்காமல் வண்டியை பூட்டி விட்டு போய் விட்டான். பொதுவாக இந்த வேன்கள் ஆள் அரவமற்ற பிரேதேசத்தில் தான் நிறுதப்ப்படுமாம். இங்கு வெய்யில் 50 டிகிரி தாண்டுவது சரவ சாதாரணம். அலட்சியத்தின் விளைவு, மூச்சு விட முடியாமல், உதவிக்கு யாரும் இல்லாமல், வெப்பத்தில் அவதிப்பட்டு, ஒரு குழந்தையின் மரணம்.
விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்.
http://arabnews.com/saudiarabia/article65581.ece
அந்த குழந்தையின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். அக்குழந்தையை பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கும், உற்றோருக்கும் கடவுள் மன தைரியத்தை தந்து துணை இருப்பாராக.
சோதனை மேல் சோதனை...
Monday, June 14, 2010
சுவாரஸ்ய சம்பவங்கள் ரெண்டு.....
இன்று நானும் என்னோட சக அலுவலரும் (அவன் ஓர் சவுதி) ஒரு விஷயமாக வெளிய போக வேண்டி இருந்தது. நான் அவனை ஒரு பத்து நிமிடம் கழித்து கார் பார்கிங்க்கு வர சொல்லி விட்டு மறந்துவிட்டேன். தவறு முழுக்க என்னோடது தான்.
என்னோட மொபைலில் அழைப்பு: RAJ WHERE ARE YOU? MAJD HERE. PLEASE COME BARKING. VERY HOT...VUF..VUF...COME FAST
மணி 11 . 40 . சும்மா சுட்டு எரிக்கும் வெயில். பாவம் அவன். எனக்கு என்மேலே எரிச்சல் வந்தது. அதோடு அவன் பேசிய இங்கிலீஷ் வேறு செம டார்ச்சர். அந்த கடுப்பிலும் என் குரங்கு மனம் காமடி பண்ணியது. அவன் சொன்ன மாதிரியே நாய் போல ஊளையிட்டுகிட்டு அவன் முன் நின்னால் எப்படி இருக்கும்??? அவன் ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்?? என்று நினைக்கும் போதே கட்டுபடுத்த முடியாமல் சிரிப்பு வந்தது. (YOU ONLY TOLD ME....PLEASE COME BARKING.!!!)
I AM WAITING SUN. YOU LAUGHING? இது அவன். SORRY MAN. HAD GOT A GUD SMS STUFF, JUST READ AND LAUGHING என்று சமாளித்து கிளம்பினோம்.
குறிப்பு: அரபியில் 'P' உச்சரிப்பில் எந்த எழுதும் கிடையாது. எனவே அவர்கள் 'P' என்பதை "B" என்று சொல்லுவார்கள். B(P)ARKING, B(P)ANDA, B(P)ROGRESS, B(P)AYMENT..
உச்ச கடுப்பில் இருந்த அவன் (கடும் வெய்யில் பாவம்), அவனுடைய உச்சரிப்பால் என் விலா எலும்பை நோகடித்து விட்டான்
சம்பவம் 2 :
மதியம் NERIYA வேலை இருந்ததால் உணவை தியாகம் பண்ண வேண்டி இருந்தது. 15ஆம் திகதிக்குள் PROPOSAL SUBMIT பண்ணியாகணும். (லவ் ப்ரோபோசல் இல்லேங்க, கிரெடிட் ப்ரோபோசல்). நாங்கள் இருப்பது என்னவோ REGIONAL OFFICE , பேருக்குதான். ஆனால் கான்டீன் எதுவும் இல்லை. அலுகலகமோ ஊருக்கு வெளியே. பக்கத்துல இருந்த பகாலாவுல (MINI STORE ) கொஞ்சம் JUNK வாங்கி திரும்பினேன். லிப்ட்இல் ரெண்டு சவுதி இளைஞர்கள் தென்பட்டார்கள்.
சவுதி: சலாம் வாலேக்கும்.
நான்: வாலேக்கும் சலாம்...
சவுதி: ARE YOU FROM INDIA?
நான்: YAA ..
சவுதி: (கட்டை விரலை உயர்த்தி) VALLAH, GOOD. YOU KNOW I AM GOING BANGALORE. GOING TO STUDY MASTERS IN COMPUTER SCIENCE. THEN I WILL GET TRAINING IN WIPRO. INDIA IS GREAT
நான்: GUD CONGRATS.
மிகவும் சந்தோஷமாக காணப்பட்டான். பின்னர் ஒரு பேப்பர காட்டினான். அது BANK GUARANTEE க்காண விண்ணப்பம். VISA FORMALITY க்கு என்று நினைகிறேன். இரண்டாம் தளத்தில் இறங்கும் போது.....HURREY, I LOVE INDIA....என்று அவன் கத்த, எனக்கு என்னோட நாட்டை நினைத்து பெருமையாக இருந்தது. ஒரு சில வினாடிக்கு தலைக்கனம் எட்டி பார்த்தது. அவனை பார்த்து 'ஜெய் ஹிந்த்' என்று கூறி விடை பெற்றேன். அவனுக்கு புரிந்து இருக்குமா? தெரியவில்லை. பெங்களூர் போனதும் ஒருவேளை புரிந்து கொள்வான்.
Sunday, June 13, 2010
வேண்டாம் இந்த சுயநலம்.........
ஆனா பாருங்க, நேத்து படிச்ச ஒரு மேட்டர் ர பாத்து ஏதோ எழுதனும்னு தோனுச்சு.
ஒரு நண்பரோட ப்ளாக் படிச்சேன்.
அவர் வெளிநாட்டுல நல்ல வசதியா வேலை செய்யுறார். அவரோட பொது நலம் கருதி ஊரு, பேரு வேண்டாமே!!
சில மாதங்கள் முந்தி சென்னை வந்ததாகவும், திரும்பி போரதக்கு ஒரு நாள் முந்தி கலைஞர் காப்பீடு திட்டத்துக்கு குடும்பத்தோட போயி போட்டோ எடுத்துகிட்ட தாகவும் போட்டு இருந்தார்.
எனக்கு படிச்சு அதிர்ச்சி ஆயிடிச்சு.!!!!!!!
அந்த திட்டம் என்பது வசதியில்லாத ஏழை எளிய மக்களுக்காக ஆரம்பிக்கபட்டது. மற்ற கேவலமான இலவச திட்டங்கள விட (எ. கா. இலவச டி.வி,) உன்னதமானது. வெளி நாட்டில் இருந்து கொண்டு ஆண்டுக்கு லட்ச கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டு இவர் இப்படி செய்தது என்னால ஏத்துக்க முடியல. (அண்ணன் நல்ல படிப்பு படிச்சு இருக்காரு, கை நிறைய சம்பளம் வாங்குறத அவரே ஒத்துக்கிட்டார்.)
பொறுக்க முடியாம அவரோட ப்ளாக்ல கீழ்கண்ட இந்த பின்னூட்டம் போட்டேன்:
Being a NRI, hopefully with a handful salary, how are you eligible for this insurance scheme?? I hope there is a maximum cap in the annual income for eligibility. Kindly explain gentleman! Waiting for your reply
13 ஜூன், 2010 12:09 am
அதுக்கு அவரோட பதில நீங்களே படிங்க:
ஆமாம்க தம்பி யுவராஜ்,
நான் nri தான், கைநிறைய சம்பாதிக்கீறேன் தான்,ஆனால் அது நிரந்தரமில்லை தம்பி,அதுவும் தவிர எனக்கு போட்டோ ஐடிக்கு அது தேவைப்பா தம்பி,நான் என்ன என்ன என் நாட்டுக்கு செஞ்சிருக்கேன்னு கணக்கு உனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை,மேலும் ரிசெஷனில் nriக்கள் ஏகம் பேர் எப்போது வேலை போய் திரும்பி வருவோம் என்றே இருக்கின்றனர். அவங்க வந்தா இது ஒரு பெரிய வரப்பிரசாதம்.மேலும் அரசுக்கு நான் 5வருடம் வரி செலுத்தியிருக்கிறேன். இனி அங்கே வந்து வேலைபார்த்தால் செலுத்தப்போகிறேன்.
உன் nri வெறுப்பை என்னிடம் உமிழாதே, btw ஆறு மாதம் ஆகியும் எங்கும் காப்பீட்டு அட்டை வழங்கப்படவில்லை,அது ஒரு #### துடைப்பு.
13 ஜூன், 2010 12:24 pm
மேற்கண்ட பொறுப்பற்ற (பருப்பான!) பதிலை கண்டதும் என்னோட சமூக கோபம் இன்னும் அதிகம் ஆனது. அவருக்கு மீண்டும் சில கேள்விகள் (அவரோட பதிலை வைத்தே) கேட்டேன். அண்ணன் செம கடுப்பாகி அதை வெளியிடவில்லை.
இப்போது வேற வழி இன்றி அந்த கேள்விகளை பதிவர்களின் சபையில் வைத்து விவாதிக்க வேண்டி உள்ளது. என்னோட சில நியாயமான கேள்விகளுக்கு யாரவது பதில் சொல்லுங்களேன்....ப்ளீஸ்!!!
a . போட்டோ ஐ.டி. க்கு பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வோட்டு போடுற கார்டு எல்லாம் இருக்கே!!!! அப்புறம் எதுக்கு இது?
b . நீங்க சாம்பாரிக்கறது நிரந்தரம் இல்லை என்பதற்காக அடுத்தவன்னுக்கு (ஏழைக்கு) உரிமை உள்ள ஒன்றை தட்டி பறிப்பீர்களா?
c . எல்லா NRI களுமே பணக்காரர்கள் இல்லை. மாதம் வெறும் 600 ரியால் மட்டும் சம்பளம் வாங்கும் பரம ஏழைகள் அநேகம். அவர்களுக்கு இந்த திட்டம் நிச்சயம் உதவும். உங்களை போல recession ல வேலை இழந்து வரும் மேதைகளுக்கு இது ஒரு வரபிரசாதமா? (எந்த கோவில் பிரசாதம் அண்ணா???)
d . அரசுக்கு வரி செலுத்தி இருந்தால், அரசின் எல்லா திட்டங்களுக்கும் உரிமை கோருவீர்களா? இலவச காப்பீட்டு திட்டம் வரி செலுத்துபவருக்கா இல்லை, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அடித்தட்டு மக்களுக்கா?
லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்:
a . Flight டிக்கெட் காசு குடுத்து எடுத்து வரீங்களா? இல்ல 'வெற்றி கோடி கட்டு' பார்த்திபன் மாதிரி withoutல வரீங்களா?
b . இலவச T .V (வண்ண தொலைகாட்சி சார்) குடுத்தாங்க. அப்படியே அதுவும் வாங்கியாச்சா?? நல்லா தெரியுதா?
எனக்கு உங்க NRI status மேல ஒரு காண்டும் இல்லைங்கண்ணா.... (வெறுத்து உமிழ ஒன்றும் இல்லை என்று புரிந்து கொள்க)
என்னா, நானும் உங்கள போல கை நிறைய சம்பாதிக்கும் ஒரு NRI தானுங்க.
அன்புடன்.......யுவராஜ்.
பதிவர்களே, என் உள்ள குமுறல்களை கொட்டி விட்டேன். நீங்களே இவர் செய்தது நியாயமா என்று ஒரு தீர்ப்பு சொல்லுங்க.
ஒருவேளை நான் ஈறை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்குறேன் என்று கருதினால் மன்னிக்க.
இந்த பதிவின் நோக்கமெல்லாம்:
எதையும் துஷ்ப்ரயோகம் செயாதீர்கள்.
அடுத்தவன் உரிமையை தட்டி பறிக்காதீர்கள்.
எனக்கு யாரையும் நடுத்தெருவில் நிறுத்தி, குற்றம் சுமத்தி அசிங்கபடுத்த விருப்பமில்லை. எனவே, அவர் பெயர் மற்றும் ஊரை நான் வெளிஇடவில்லை.
Friday, April 2, 2010
எப்படி இப்படி!
Monday, February 15, 2010
நான் சவுதி வந்த (சோக) கதை - பகுதி - V
(இதற்கிடையில், கடவுள் அருளால், நவம்பர் ஆறாம் தேதி எங்களுக்கு ஒரு அழகான ரோஜாப்பு குட்டி பிறந்தா. அவளுக்கு 'ஜோஷ்னா'NU பேரு வெச்சு இருக்கோம். )
அந்த லெட்டர் ர திரும்ப சவூதிக்கு அனுப்பி, வேற ஒன்னு வாங்கி....உஸ்ஸ்ஸ்ஸ்..... முடியல..கண்ண கட்டுதே. ஒரு வழியா, விசா ஸ்டாம்ப் பண்ணும் போது, நவம்பர் மாசம் நடுவுல வந்துடுச்சு. அஞ்சு மாசம்!!!!
(சொந்த காசுல சூனியம் வெச்சுக்க சவுதி வரான் வேட்டைக்காரன்!!)
Monday, February 8, 2010
நான் சவுதி வந்த (சோக) கதை - பகுதி - IV
Saturday, February 6, 2010
நான் சவுதி வந்த (சோக) கதை - பகுதி - III
I SAID " SIR, I AM SPEAKING IN ENGLISH". ??????
நல்ல நேரம், இன்னொருவர் என்னை காப்பாற்றினார். He said "Could you tell the numbers in millions and in US Dollars please?". உஸ்ஸ். கண்ணு கட்டுதே. நல்ல வேலை இவருக்கு கண்டிப்பா நான் பேசினது புரிஞ்சு இருக்கும்னு மனச தேத்திகிட்டேன். எல்லாம் முடிந்து நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன். மாம்ஸ் வெய்டிங். "ஏன்டா நீ இன்டர்வியு குடுக்க வந்தியா? எடுக்க வந்தியா? இவ்ளோ நேரம் உள்ள என்ன செஞ்ச?" அவரிடம் கதை சொல்லிக்கொண்டு இருக்கும் போது, கோ-ஆர்டிநெடர் ஓடி வந்தார். "Can you come for a minute please. You are being called" என்ன கிரகம்டா இதுனு நெனச்சிகிட்டு உள்ளே போனேன். சம்பளம் பற்றி விவாதம் நடந்தது. 90% ஓகே என்று மனம் கூச்சச்சளிட்டது. வந்ததுக்கு சாதிச்சுட்டே மகனே!.
"Sorry for calling you again. Thank you for making it all the way from India. You will be called again in case if your shortlisted".
"சரி சரி, கண்டிப்பா நீங்க என்னை கூபிடுவிங்கனு எனக்கு தெரியும். ஏன்னா நீங்க எங்களைவிட பத்து வருஷம் BANKING LA பின் தங்கி இருக்கீங்க. உங்களுக்கு ஆளு தேவைன்னு" நெனச்சிக்கிட்டே லாபி நோக்கி நடந்தேன்.
பின்னால் இருந்து ஒரு குரல். தமிழில். "யுவராஜ், எப்படி போச்சு?"
CONT IN PART IV.....
Friday, February 5, 2010
நான் சவுதி வந்த (சோக) கதை - பகுதி - II
CONT IN PART III
நான் சவுதி வந்த (சோக) கதை!!! - பகுதி I
பேசிய அந்த பெண், ஒரு HR CONSULTANT. சவுதி நாட்டில் சில வேலை வாய்புகள் இருப்பதாகவும் தங்களுக்கு விருப்பம் இருந்தால் தங்களுடைய RESUME ஒரு பிரதியை தனக்கு மின் அஞ்சல் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். வங்கியின் பெயர் SAMBA FINANCIAL GROUP என்று சொன்னார். என்ன கொடுமை சார் எது? . கம்பெனி பேருல "BANK" அப்படிங்கற வார்த்தையே இல்லைங்க. ஏதோ பைனான்ஸ் கம்பெனி பேரு போல இருக்கேன்னு ஒரு பலத்த சந்தேகம். மனுஷனுக்கு பயமா இருகாதா. ஒருவேளை நம்ம பழைய சினேஹம் பைனான்ஸ், ரமேஷ் கார்ஸ் மாதிரி இருந்துட்டா? அதை அந்த பெண்ணிடமே கேட்க, சார், அது பெரிய பேங்க் சார். நீங்க வேணும்னா அவங்களோட வலைதளத்துல போயி பார்த்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால் திரும்ப இதே எண்ணில் மீண்டும் கூப்பிடுங்க என்று சொன்னார். எனக்கு மிகுந்த அலுவல் இருந்ததால் RESUME மட்டும் மின் அஞ்சல் செய்து விட்டு அந்த வங்கியின் வலை தளத்தை பார்க்க மறந்து விட்டேன்.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே அழைப்பு. "SIR, YOUR RESUME IS SHORTLISTED AND YOU NEED TO TRAVEL TO DUBAI FOR THE FINAL INTERIEW. YOU HAVE TO BEAR ALL THE COST AND WILL BE REIMBURSED BY THE BANK SUBSEQUENTLY. CAN WE KNOW, IF YOUR ARE INTERESTED??? என்று ஒரே மூச்சில் பேசி முடிக்க, எனக்கு ஒன்றும் புரிய வில்லை.
காரணம், நான் இந்த பன்னாட்டு வங்கியில் சேர்ந்து மூன்று மாதம் தான் ஆகிறது. எனவே, நான் நாளை கூறுவதாக சொல்லிவிட்டு தொடர்பை (அட! அலைபேசி தொடர்புங்க) துண்டித்தேன். சம்பா வலை தளம் சென்று முதலில் அது ஒரு வங்கி தான், சீட்டு கம்பனி இல்லை (!) என்று உறுதி படுத்திக்கொண்டேன்.
நேர்முக தேர்வு ஞாயிறு அன்று இருந்ததால் சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக்கொண்டு (வழக்கம் போல் பாஸ் கிட்ட பொய் சொல்லிட்டு) கிளம்ப திட்டமிட்டேன். அந்த வாரம் எனக்கு சேலம் கிளையில் வேலை இருந்ததால் சேலத்தில் அம்மா வீட்டில் தான் இருந்தேன். உண்மைய சொன்னால் விடமாட்டார்கள் என்பதால் சென்னை போறேன் என்று சொல்லிவிட்டு கெளம்பினேன். (நான் சென்னை வழியா தாங்க EMIRATES AIRLINESல டிக்கெட் போட்டு இருந்தேன். அதனால், நான் உண்மை சொல்லிட்டு தான் போனேன். பொய் சொல்லலை....ஹீ..ஹீ..ஹீஎஹீ). பொண்டாட்டிகிட்டேயும் அதே கதை தான். (ஆனாலும் என்னோட CID தங்கை பரணி நான் என்னோட பாஸ்போர்ட் எடுத்து வைத்ததை பார்த்து கண்டு பிடித்ததும், பிறகு சொன்னதும் தனி கதை).
ஷார்ஜாவில் இருந்த என்னோட மாமா சேகரிடம் போன் போட்டு ஏர்போர்ட் வர சொல்லிவிட்டேன். அவரையும் பார்த்து சில ஆண்டுகள் இருக்கும். இப்படி ஒரே கல்லுல பல மாங்காய். வந்தா மலை, போன மயிறு என சென்னை நோக்கி என் பயணம் தொடங்கியது. தெரிஞ்ச முகம் எதுவும் கண்ணில் படகூடாது என்பதற்காக A/C TWO TIERல டிக்கெட் போட்டேன். இல்லாட்டி எதுக்கு சென்னை போறோம்னு விளக்கம் சொல்லியே நாம ஓஞ்சி போக வேண்டி இருக்கும்.
வண்டி சேலம் ஜங்ஷன் விட்டு கிளம்பி சிறிது நேரத்தில் சேலம் டவுன் ஸ்டேஷன் அடைந்தது. எது நடக்க கூடாதுன்னு நான் நெனச்சேனோ அதுவே நடந்தது. WHAT A SURPRISE யுவராஜ்!! என்று ஒரு பரிச்சியமான குரல். சேலம் நரசுஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பாலு அவர்கள் எனக்கு அருகே வந்து அமர்ந்தார். என்னோட வங்கியின் பெரிய வாடிக்கையாளர். எனக்கும் அவருக்கும் அருகருகே இருக்கைகள். சிறிது நேரம் பேசிவிட்டு உறங்க போனோம். காலையில் அவரே எழுப்பி விட்டார். "சென்னைல எங்க போறீங்க யுவராஜ், சொல்லுங்க. I CAN DROP U "என்றார். ஆஹா, இது என்னடா வம்பு என்று இதையும் சமாளித்து ஆட்டோ பிடித்து AIRPORT வந்து சேர்ந்தேன்.
என்னை பற்றி ஒரு சின்ன அறிமுகம்.....
யார் யாரோ ப்ளாக்ல கிறுக்குறாங்க, கலாய்க்கறாங்க...கொஞ்சம் என்னோட பங்குக்கு நானும் ஒரு கை பாக்குறேன். நான் தற்போது சவுதி அரேபியாவில் ஒரு வங்கி அதிகாரியா வேலை செய்யுறேன். வந்து கிட்டத்தட்ட 15மாசம் ஆகுது. இந்த நாட்டுல ஆணி புடுங்கினது போதும்னு தோணுது. இன்னும் சில மாதங்கள்ள ஊருக்கு போலாம்னு முடிவு பண்ணியாச்சு. என்னோட இந்த அனுபவங்களை ஆ முதல் அக்கு வரை என்னால் முடிஞ்ச நகைச்சுவை நடைல இங்க பகிர்ந்துக்க போறேன்.
படிங்க, சிரிங்க, சந்தோஷமா இருங்க...
அன்புடன்........யுவராஜ்.